.
ஐ.நா வின் முன்னாள் செயலாளர் கோபி ஆனந்த் முன்னெடுத்த புதிய ஆய்வொன்றின் படி பருவ நிலை மாற்றம் காரணமாக ஒரு வருடத்தில் 300 000 பேர் மரணமடைவதாகக் கணிக்கப்பட்டிருக்கிறது.
அத்துடன் இம்மாற்றங்களால் 125 பில்லியன் டாலர் பொருளாதார நட்டமும் ஏற்படுவதாக சொல்லப்படுகின்றது.
மேலும் இந்நிலை இப்படியே தொடர்ந்தால் 2030 ஆம் ஆண்டு இப்பொருளாதார இழப்பு 300 பில்லியன் டாலராக இருக்கும் என்றும் எதிர்வு கூறப்படுகின்றது. மேலும் கோபி அனானால் நடத்தப்பட்ட பூகோள ரீதியான மனிதவியல் கருத்துக் கணிப்பு ஒன்றினால் 600 மில்லியன் மக்கள் பருவ நிலை மாற்றங்களால் ஏற்படவிருக்கும் குறிப்பிட்ட இக்காலப்பகுதியில் மோசமாகப் பாதிக்கப்பட இருக்கின்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.
பருவ நிலை மாற்றங்களால் ஒவ்வொரு வருடமும் இறந்து வரும் மக்களின் எண்ணிக்கையானது (3 இலட்சம்) ஒவ்வொரு வருடமும் 2004ம் ஆண்டு இந்து சமுத்திரத்தில் நிகழ்ந்த சுனாமி போன்ற அனர்த்தம் ஏற்பட்டு அதனால் இறக்கும் மக்களின் எண்ணிக்கைக்குச் சமனாகும்.
ஒருவருடத்துக்கு 325 மில்லியன் பொது மக்களைப் பாதித்து வரும் இம்மாற்றம் இன்னும் 20 வருடங்களுக்குப் பின் உலக சனத்தொகையில் பத்தில் ஒரு பங்கு மக்களைப் (600 மில்லியன்) பாதிக்கும் என்று கணிக்கப்பட்டிருப்பதுடன் இதுவே சமூகத்திற்கு மிகப் பெரிய சவாலாக விளங்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
சஹாரா பாலைவனத்தை ஒட்டிய ஆப்பிரிக்க நாடுகளில் வாழும் மக்களுக்கே இது பற்றிய கூடிய கவனம் தேவை என்றும் அந்த சுட்டறிக்கையில் கூறப்பட்டிருக்கின்றது. மேலும் கோபி அனான் இது பற்றிக் கருத்துரைக்கையில் இப்பிரச்சனை சம்பந்தமாக உலக நாடுகள் சர்வதேச ரீதியில் தீர்வு காண்பதற்கு முன்வர வேண்டும் என்றுள்ளார்.
Monday, November 30, 2009
ஐ.பி.எஸ். அதிகாரி மீது 498A வழக்கு
சுட்டி: http://www.dailythanthi.com/article.asp?NewsID=512726&disdate=9/8/2009&advt=1
ஐ.பி.எஸ். போலீஸ் அதிகாரி மீது அவரது மனைவி சென்னை போலீஸ் கமிஷனரிடம் பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகார் மனு மீது விசாரணை நடத்தும்படி வரதட்சணை தடுப்பு உதவி போலீஸ் கமிஷனருக்கு, கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார்.
சென்னை கொடுங்கையூர் முத்தமிழ் நகரை சேர்ந்தவர் தண்டியப்பன். இவரது மகள் ஷர்மிளா நேற்று காலையில் சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து பரபரப்பான புகார் மனு ஒன்றை கொடுத்தார்.
இளம் பெண் ஷர்மிளாவோடு சீனியர் வக்கீல் சுதா ராமலிங்கமும் (இந்தப் பெயரை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்!) வந்திருந்தார். ஷர்மிளாவின் கணவர் பெயர் எஸ்.ஆர்.சாமுவேல் என்பதாகும். ஐ.பி.எஸ். அதிகாரியான அவர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணியாற்றுகிறார்.
தனது கணவர் மீது ஷர்மிளா கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:-
நான் எம்.பி.ஏ. பட்டப்படிப்பு படித்துவிட்டு, சென்னையில் உள்ள வங்கி ஒன்றில் உதவி மானேஜர் அந்தஸ்தில் அதிகாரியாக பணியாற்றி வந்தேன்.
இந்த நிலையில், பரமக்குடியில் இருந்து மாப்பிள்ளை வீட்டார் என்னை வந்து பெண் பார்த்தார்கள். எனது பெற்றோரையும் சந்தித்து பேசினார்கள். எனது கணவரும் முறைப்படி எனது அலுவலகத்தில் வந்து என்னை பெண் பார்த்தார்.
`நான் ஐ.பி.எஸ். அதிகாரி என்றும், நீ இந்த வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டு, ஐ.ஏ.எஸ். தேர்வு எழுத வேண்டும்' என்றும் கூறினார். நானும் அவரை திருமணம் செய்ய சம்மதித்து எனது வங்கி வேலையை ராஜினாமா செய்துவிட்டேன்.
2.2.2009 அன்று சுயமரியாதை முறைப்படி சென்னையில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் எங்களது திருமணம் நடந்தது. அமைச்சர் ஒருவர் தலைமை தாங்கி எங்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்.
திருமணத்துக்கு முன்புவரை நெற்றியில் விபூதி, குங்குமம் அணிந்து முருகர் பக்தன் என்றும், திருப்பதி ஏழுமலையான் பக்தன் என்றும் எனது கணவர் பக்தி பரவசத்தோடு காட்சி அளித்தார். திருமணத்துக்கு பிறகுதான் அவரது சுயரூபம் தெரிய ஆரம்பித்தது.
நாங்கள் இந்து மதத்தை சேர்ந்தவர்கள் சுத்த சைவம். அசைவம் சாப்பிட மாட்டோம்.
எனது கணவர் கிறிஸ்தவ மதத்தில் இருந்து இந்துவாக மதம் மாறிவிட்டதாகவும், சாமுவேல் என்ற பெயரை `சாம்வேல்' என்று மாற்றிவிட்டதாகவும்' கூறினார். அவரை நல்லவர் என்று நம்பி நான் மோசம் போனேன். திருமணம் முடிந்த பிறகு அவர் எங்கள் வீட்டுக்கு வர மறுத்துவிட்டார்.
சென்னை எழும்பூரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தான் எங்களது முதலிரவு நடந்தது. முதலிரவின்போது நன்றாக குடித்துவிட்டு போதையில் வந்தார்.
அசைவம் சாப்பிட மாட்டேன் என்று சொன்னவர் சிக்கன் பிரியாணியை வரவழைத்து சாப்பிட்டார். என்னையும் கட்டாயப்படுத்தி சிக்கன் பிரியாணியை சாப்பிட சொன்னார்.
அசைவம் எனக்கு பிடிக்காததால், அவர் கொடுத்த பிரியாணியை சாப்பிட்டுவிட்டு நான் வாந்தி எடுத்தேன். திருமணத்துக்கு முன்பு வரதட்சணை எதுவும் வேண்டாம் என்று எனது கணவர் கூறினார். இருந்தாலும் எனது பெற்றோர் 78 சவரன் நகைகள் எனக்கு வரதட்சணையாக போட்டு அனுப்பினார்கள்.
முதலிரவு அறைக்குள் நுழைந்தவுடன் நீ போட்டிருக்கும் நகைகளை எல்லாம் கழற்றி எடுத்துக்கொண்டு வா என்று உத்தரவுபோட்டார். நானும் நகைகளை கழற்றி ஒரு தட்டில் எடுத்து வைத்தேன்.
நகைகளை கையில் தூக்கி பார்த்து `நான் ஒரு ஐ.பி.எஸ். அதிகாரி, எனக்கு வரதட்சணையாக இவ்வளவு நகைகள்தான் போடுவீர்களா' என்று கேவலமாக பேசினார். எங்கள் வீட்டுக்கு விருந்து சாப்பிட வரும்படி பெற்றோர்கள் அழைத்தார்கள். பிடிவாதமாக வர மறுத்துவிட்டார். 14.2.2009 அன்று விமானத்தில் என்னை டெல்லி அழைத்து சென்றார். எனது பெற்றோர் விமானநிலையத்துக்கு வந்து தான் வழி அனுப்பினார்கள். டெல்லியில் ஒரு நண்பர் வீட்டில் தங்கினோம். அங்கும் நண்பர் முன்பே என்னை கேவலமாக பேசினார்.
காஷ்மீரிலும் என்னை ஒரு சிறை பறவை போலவே வீட்டில் அடைத்து வைத்திருந்தார். வேலைக்காரர்கள் முன்னிலையில் என்னிடம் அன்பாக பேசுவதுபோல் நடிப்பார்.
வேலைக்காரர்கள் போனதும் என்னை அடித்து உதைத்து சித்ரவதை செய்வார். ஒருகட்டத்தில் என்னை கொலை செய்யவும் துணிந்துவிட்டார்.
போனில் பேசி அடியாட்களை வீட்டுக்கு வரும்படி அழைத்தார். ரூ.5 லட்சம் கூலி தருகிறேன். ஒரு பெண்ணை கொலை செய்து காஷ்மீர் பனிகட்டியில் புதைக்க வேண்டும் என்று என் முன்னாலேயே பேசினார். போதைப்பொருள் வழக்கில் எனது பெற்றோரை சிக்கவைத்துவிடுவேன் என்றும் மிரட்டினார்.
இனிமேலும் அவரோடு வாழ்ந்தால் உயிருக்கு ஆபத்து என்று பயந்தேன். எனது பெற்றோருக்கு தகவல் கொடுத்துவிட்டு, அவரிடமிருந்து தப்பி சென்னை வந்துவிட்டேன்.
அவர் முழுக்க, முழுக்க என்னை ஏமாற்றி மோசடி திருமணம் செய்துவிட்டார். கிறிஸ்தவனாக இருந்துகொண்டே இந்துவாக மதம் மாறிவிட்டதாக பொய் சொன்னார். வரதட்சணை கேட்டு என்னை தினந்தோறும் அடித்து உதைத்து சித்ரவதை செய்தார். அவர்மீது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்க வேண்டுகிறேன்.
இவ்வாறு ஷர்மிளா தனது புகார் மனுவில் கூறியுள்ளார்.
ஷர்மிளா கொடுத்த புகார் மனு தொடர்பாக அவரது வக்கீல் சுதா ராமலிங்கம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
எனது கட்சிக்காரர் ஷர்மிளா கணவரால் மிகவும் கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார். சுயமரியாதை திருமணம் என்பது இந்து பெண்ணுக்கும், இந்து மாப்பிள்ளைக்கும் தான் நடக்க வேண்டும். கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர் இந்து பெண்ணை சுயமரியாதை திருமணம் செய்துகொள்ள முடியாது. அது சட்டப்படி குற்றமாகும்.
ஷர்மிளாவின் கணவர் சாமுவேல் வழுக்கை தலை உடையவர் ஆவார். ஷர்மிளாவை பெண் பார்க்க வந்தபோது தலையில் தொப்பியோடு வந்துள்ளார். ஏழுமலையானுக்கு மொட்டை போட்டுள்ளதால் தலையில் தொப்பி வைத்திருப்பதாக கூறியிருக்கிறார். திருமணத்தின்போது தலை நிறைய முடியோடு வந்துள்ளார்.
முதலிரவில் அவரது முடியின் ரகசியம் அம்பலமாகிவிட்டது. அவர் தலையில் `விக்' அணிந்து ஏமாற்றி உள்ளார். முதலிரவின்போது `விக்'கை கழற்றி வைத்துவிட்டு வழுக்கை தலையோடு இருந்துள்ளார். முதலிரவின்போதே சாமுவேலின் வழுக்கை தலையை பார்த்து, ஷர்மிளாவின் வாழ்க்கையும் வழுக்க ஆரம்பித்துவிட்டது. சாமுவேல் செய்த கொடுமையால் கர்ப்பமாக இருந்த ஷர்மிளாவின் வயிற்றில் இருந்த குழந்தையும் `அபார்ஷன்' ஆகிவிட்டது.
கிறிஸ்தவராக இருந்துகொண்டு இந்து என்று பொய் சொல்லிக்கொண்டு சுயமரியாதை திருமணம் நடத்தி மிகப்பெரிய மோசடி நடந்துள்ளது. சாமுவேல் வடமாநில பெண் ஒருவரை ஏற்கனவே திருமணம் செய்து விவாகரத்து பெற்றுள்ளார். கடந்த 2 மாத காலமாக தீர ஆலோசித்து தான் இந்த புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது. சாமுவேல் செய்த குற்றத்துக்கு 10 ஆண்டுகள் வரை ஜெயில் தண்டனை வாங்கி கொடுக்க சட்டத்தில் இடம் உள்ளது.
இவ்வாறு வக்கீல் சுதா ராமலிங்கம் தெரிவித்தார்.
ஷர்மிளா கொடுத்த புகார் மீது விசாரணை நடத்தும்படி வரதட்சணை கொடுமை தடுப்பு உதவி கமிஷனர் விமலாவுக்கு, கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். அரசு வக்கீலிடம் சட்ட ஆலோசனை பெற்று இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை போலீஸ் வட்டாரத்தில் நேற்று இரவு தெரிவிக்கப்பட்டது.
============
இதுபோல் பரவலாக மேல் மட்டங்களில் 498A கேசுகள் மேலும் பற்பல குற்றப் பிரிவுகளோடு சேர்த்துப் போடப்பட்டு ஜெகஜ்ஜோதியாக வலம் வந்தால்தான் ஒரு விமோசனம் கிட்டும்! தொடரட்டும் வி.ஐ.பி 498A கேசுகள்!
‘தேவதையை கண்டேன்’ சினிமா பாணியில்
"வேறொருவரை மணப்பதாக கூறும் காதலி மீது நடவடிக்கை எடுங்கள்"
- புறநகர் கமிஷனரிடம் வாலிபர் புகார்
ஆலந்தூர், ஜன. 28: ‘தேவதையை கண்டேன்’ என்ற படத்தில் வருவது போன்ற சம்பவம், சென்னையில் நடந்துள்ளது.
தன்னை 4 ஆண்டுகளாக காதலித்துவிட்டு, இப்போது வேறு நபரை திருமணம் செய்யப்போவதாக கூறும் காதலி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் காதலன் புகார் கொடுத்துள்ளார்.
அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ. காலனியைச் சேர்ந்தவர் ஐசக் சுஜின் (25), இன்ஜினியர். இவர், சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிடம் கொடுத்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
நந்தம்பாக்கம் கணபதி காலனியைச் சேர்ந்த ஷாலினி (23) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஒரு நண்பர் மூலம் எனக்கு பழக்கமானார். இருவரும் கடந்த 4 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். சென்னையில் உள்ள ஒரு இன்ஜினியரிங் கல்லூரியில் ஷாலினி படித்தார். அவருக்கு கல்லூரிக் கட்டணம் செலுத்துவது, நகை வாங்கிக் கொடுப்பது என தாராளமாக செலவு செய்தேன். எனது வீட்டுக்கும் ஷாலினியை அழைத்துச் செல்வேன். அப்போது மருமகள் போலவே அவரை எனது பெற்றோர் நடத்தினர்.
இந்நிலையில், கடந்த மாதம் வேறு நபருடன் தனக்கு திருமணம் நடக்கப்போகிறது. இனி என்னுடன் பேசாதீர்கள் என்று ஷாலினி கூறிவிட்டார். என்னால் ஷாலினியை மறக்க முடியவில்லை. அதனால் அவரது வீட்டுக்கு போய் பார்த்தேன். அப்போது ஷாலினியின் தந்தை, என்னை கொலை செய்து விடுவதாக மிரட்டினார். 4 ஆண்டுகளாக என்னைக் காதலித்துவிட்டு வேறு நபரை மணக்கப் போதவதாகக் கூறும் ஷாலினி மீதும் கொலை மிரட்டல் விடுத்த அவரது தந்தை மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு ஜசக் சுஜின் மனுவில் கூறியுள்ளார். இதுகுறித்து விசாரிக்க பரங்கிமலை இன்ஸ்பெக்டருக்கு, கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டுள்ளார்.
------------'
இது வித்தியாசமான புகார். ஆனால் தினமும் நாம் பார்க்கும் செய்தி, பல பெண்கள் தன் காதலனுடன் வருடக்கணக்கில் சுற்றி விட்டு, ”என்னை மணப்பதாக வாக்களித்து ஜாலியாக இருந்துவிட்டு (என்னவோ இவளுடைய ஒத்துழைப்பு இல்லாமல் அவன் மட்டும் தனக்குத்தானே ஜாலியாக இருந்தான் போல!) என்னை கைவிட்டுவிட்டான்” என்று பெண்கள் புகார் கொடுப்பதும் உடனே அந்த ஆண்களை கற்பழிப்பு கேசில் புக் செய்து கைது செய்வதும்தான் நடைமுறை.
“வரதட்சணை கொடுமை” (sec 498A)
கணவன், மனைவியிடையே எந்தவித பிரச்னை ஏற்பட்டாலும் அது உடனே “வரதட்சணை” என்ற சாயம் பூசப்பட்டு இபிகோ 498A பிரிவின்கீழ் வழக்கு பதியப்பட்டு கணவன் மற்றும் அவனுடைய பெற்றோர் கைது செய்யப்படும் விந்தையை அன்றாடம் காண்கிறீர்கள். ஏன்?
சிம்பிள்! அதற்கென்றே ஒரு கொடுங்கோன்மை சட்டம் கைவசம் இருக்கிறதே, பிறகு என்ன, அதைக் கையிலெடுத்து பழி வாங்கும் வெறியைத் தணித்துக் கொள்ளலாமே!
அதன்படி புகார் கொடுப்பவர்களுக்கு எந்த வித முகாந்திரமோ, சாட்சியமோ, தரவோ கொடுக்கவேண்டியதில்லை. இன்னார் என்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார் என்று புகார் அளித்தாலே போதும். மேலும் இந்த சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் அதிசயங்களைப் பாருங்கள்:
1. கொடுக்கப்பட்ட புகாரில் கண்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுதும் பொய் என்று நிரூபிக்கப்பட்டாலும் புகார் கொடுத்தவர் மேல் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கமுடியாது!
2. புகார் கொடுக்கப்பட்ட உடனே புகாரில் எதிரியாகக் குறிப்பிடப்பட்ட அனைவரையும், எந்தவித விசாரணையுமின்றி கைது செய்யவேண்டும். (”கைது” என்பதுதான் இந்தச் சட்டத்தின்மேல் பெண்களுக்கு ஒரு அட்ராக்ஷன். வக்கீல்களுக்கும்தான் - ஏனெனில் ஜாமீன் அது இது என்று காசை அள்ளலாமே!)
3. ஜாமீன் கிடையாது - cognizable offence
4. குற்றசாட்டை வாபஸ் பெற முடியாது - non-compoundable
5. வரதட்சணை கேட்டதாகவும், அதற்காக கொடுமப்ப் படுத்தியதாகவும் புகாரில் கூரப்பட்டுள்ள குற்றங்கள் எந்த காலகட்டத்தில் நிகழ்ந்தாலும், எப்போது வேண்டுமானாலும் கேசு போடலாம். உதரணமாக, உங்கள் மனைவி நீங்களும் உங்கள் தாயாரும் ஏனையோரும், 30 ஆண்டுகள் முன்னால் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக இன்று புகார் கொடுத்து வழக்கு பதியலாம். இதுபோல் வேறெந்த சட்டப் பிரிவின் கீழும் செய்ய இயலாது.
6. கண்வன் மற்றும் அவனுடைய பெற்றோருடன் சேர்த்து யாரை வேண்டுமானாலும் புகாரில் சேர்த்து குற்றவாளிப் பட்டியலில் உள்ளிடலாம். 85 வயதான மாமனார், மாமியார், 3 வயது நாத்தனார் மகன் - இப்படி.
7. சிறிதும் தொடர்பில்லாத நபர்கள் பெயரையும் குற்ற்வாளிகளாகச் சேர்க்கலாம். மன்மோகன் சிங் பெயரைக் கூட சேர்க்கலாம்! பொய்யான நிகழ்ச்சிகளை கற்பனையுடன் சேர்த்து எழுதலாம்.
8. குற்றங்களின் பட்டியலில் மேலும் பல செக்ஷன்களைச் சேர்ப்பதற்காக, மாமனார் கையைப் பிடித்து இழுத்தார், புளு ஃபிலிம் பார்த்தார்கள்.. இப்படி எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
இதுபோன்ற பொய் வழக்கு ஸ்பெஷலிஸ்டுகளாக பல வக்கீல்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற பல டெம்பிளேட்டுகளை கைவசம் வைத்துள்ளார்கள். குடும்ப வாழ்வை முறிக்கும் கெடுமதிப் பெண்கள் கொடுக்கும் காசுக்கு ஏற்றபடி புகார்களை ஜோடித்துக் கொடுப்பார்கள்.
இப்போது இந்த செய்தியை வாசியுங்கள். ஏதோ ஒரு பிரச்னை எப்படி 498A - யாக உருவெடுக்கிறது பாருங்கள்!
சிம்பிள்! அதற்கென்றே ஒரு கொடுங்கோன்மை சட்டம் கைவசம் இருக்கிறதே, பிறகு என்ன, அதைக் கையிலெடுத்து பழி வாங்கும் வெறியைத் தணித்துக் கொள்ளலாமே!
அதன்படி புகார் கொடுப்பவர்களுக்கு எந்த வித முகாந்திரமோ, சாட்சியமோ, தரவோ கொடுக்கவேண்டியதில்லை. இன்னார் என்னிடம் வரதட்சணை கேட்டு துன்புறுத்தினார் என்று புகார் அளித்தாலே போதும். மேலும் இந்த சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பின் அதிசயங்களைப் பாருங்கள்:
1. கொடுக்கப்பட்ட புகாரில் கண்டுள்ள குற்றச்சாட்டுக்கள் முழுதும் பொய் என்று நிரூபிக்கப்பட்டாலும் புகார் கொடுத்தவர் மேல் எந்தவித நடவடிக்கையையும் எடுக்கமுடியாது!
2. புகார் கொடுக்கப்பட்ட உடனே புகாரில் எதிரியாகக் குறிப்பிடப்பட்ட அனைவரையும், எந்தவித விசாரணையுமின்றி கைது செய்யவேண்டும். (”கைது” என்பதுதான் இந்தச் சட்டத்தின்மேல் பெண்களுக்கு ஒரு அட்ராக்ஷன். வக்கீல்களுக்கும்தான் - ஏனெனில் ஜாமீன் அது இது என்று காசை அள்ளலாமே!)
3. ஜாமீன் கிடையாது - cognizable offence
4. குற்றசாட்டை வாபஸ் பெற முடியாது - non-compoundable
5. வரதட்சணை கேட்டதாகவும், அதற்காக கொடுமப்ப் படுத்தியதாகவும் புகாரில் கூரப்பட்டுள்ள குற்றங்கள் எந்த காலகட்டத்தில் நிகழ்ந்தாலும், எப்போது வேண்டுமானாலும் கேசு போடலாம். உதரணமாக, உங்கள் மனைவி நீங்களும் உங்கள் தாயாரும் ஏனையோரும், 30 ஆண்டுகள் முன்னால் வரதட்சணை கேட்டு கொடுமைப் படுத்தியதாக இன்று புகார் கொடுத்து வழக்கு பதியலாம். இதுபோல் வேறெந்த சட்டப் பிரிவின் கீழும் செய்ய இயலாது.
6. கண்வன் மற்றும் அவனுடைய பெற்றோருடன் சேர்த்து யாரை வேண்டுமானாலும் புகாரில் சேர்த்து குற்றவாளிப் பட்டியலில் உள்ளிடலாம். 85 வயதான மாமனார், மாமியார், 3 வயது நாத்தனார் மகன் - இப்படி.
7. சிறிதும் தொடர்பில்லாத நபர்கள் பெயரையும் குற்ற்வாளிகளாகச் சேர்க்கலாம். மன்மோகன் சிங் பெயரைக் கூட சேர்க்கலாம்! பொய்யான நிகழ்ச்சிகளை கற்பனையுடன் சேர்த்து எழுதலாம்.
8. குற்றங்களின் பட்டியலில் மேலும் பல செக்ஷன்களைச் சேர்ப்பதற்காக, மாமனார் கையைப் பிடித்து இழுத்தார், புளு ஃபிலிம் பார்த்தார்கள்.. இப்படி எதை வேண்டுமானாலும் சேர்க்கலாம்.
இதுபோன்ற பொய் வழக்கு ஸ்பெஷலிஸ்டுகளாக பல வக்கீல்கள் இருக்கிறார்கள். இதுபோன்ற பல டெம்பிளேட்டுகளை கைவசம் வைத்துள்ளார்கள். குடும்ப வாழ்வை முறிக்கும் கெடுமதிப் பெண்கள் கொடுக்கும் காசுக்கு ஏற்றபடி புகார்களை ஜோடித்துக் கொடுப்பார்கள்.
இப்போது இந்த செய்தியை வாசியுங்கள். ஏதோ ஒரு பிரச்னை எப்படி 498A - யாக உருவெடுக்கிறது பாருங்கள்!
மனைவியின் சொல்லுக்கு கிழ்படிந்து நட -( உச்சநீதிமன்றம் அறிவுரை )
உச்சநீதிமன்ற நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் தீபக் வர்மா இருவரும், கடந்த 17 ஆண்டுகளாக இழுத்தடிக்கும் ஒரு ராணுவ லெஃப்டினண்ட் கர்னலுக்கும் அவருடைய மனைவிக்கும் இடையேயான விவாகரத்து வழக்கை விசாரிக்கும்போது உதிர்த்துள்ள முத்துக்கள் இவை:1. மனைவி என்ன கூறினாலும் அதை அப்படியே கேட்கவேண்டும்.
2. மனைவியின் கூற்றை மறுத்தே பேசக்கூடாது
3. மனைவி ”இந்தப் பக்கம் பார்” என்று ஆணையிட்டால் உடனே கீழ்ப்படியவேண்டும்
4. அடுத்த நொடி “அந்தப் பக்கம் பார்” என்றால் உடனே அப்படியே செய்யவேண்டும்.
எவ்வளவுதான் முட்டாள்தனமாக இருந்தாலும் மனைவியின் ஆணைக்குக் கீழ்ப்படிந்து நடக்கவில்லையென்றால் கணவர்கள் கடுமையான பின்விளைவுகளுக்கு ஆளாக நேரிடும். அப்படி மனைவி சொல்லுக்கு அடிமையாக இருந்தால்தான் மணவாழ்க்கையில் நிம்மதி கிடைக்கும் என்றார்கள் அந்த நீதியரசர்கள்.
வழக்கின் விவரம்:
விவாகரத்துக்காக கணவன் 10 லட்ச ரூபாய் கொடுத்தால்போதும் என்று ஹைகோர்ட்டில் தீர்மானமனதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்துள்ளார் மனைவி. அவர் தன் கணவன்மேல் பற்பல கிரிமினல் கேசுகளைப் போட்டுத் தாக்கியுள்ளார். கடந்த 17 ஆண்டுகளாக கணவர் அந்தக் கேசுகளை எதிர்த்துப் போராடி அத்துணை கேசுகளிலும் நிரபராதியாக தீர்ப்பளிக்கப்பட்டு வெளிவந்திருக்கிறார். அந்தக் கேசுகளாலேயே ஓட்டாண்டியாகிவிட்ட கணவரை இன்னும் பல லட்சங்கள் கொடு என்று மேல்முறையீடு செய்திருக்கிறார் அந்தப் பெண்குலத் திலகம்.
செய்தி: டைம்ஸ் ஆஃப் இந்தியா.
இந்தியாவை விட பாகிஸ்தானிடம் அதிக அணு ஆயுதங்கள்
உலகில் அணு ஆயுதங்களை குவித்து வைத்துள்ள நாடுகள் பற்றி அணுசக்தி நிபுணர்கள் ராபர்ட் நாரீஸ் மற்றும் ஹான்ஸ் கிறிஸ்டன் ஆகியோர் நடத்திய ஆய்வில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. "அணு ஆயுத உற்பத்தியில், ஆசிய நாடுகளான பாகிஸ்தானும், இந்தியாவும் சம அளவில் ஈடுபட்டு வருகின்றன. சீனாவும் அதன் பங்குக்கு அணு ஆயுதங்களை உற்பத்தி செய்து குவிக்கிறது. பாகிஸ்தானைப் பொறுத்தவரையில் 70 முதல் 90 அணு ஆயுதங்களையும், இந்தியாவைப் பொறுத்தவரையில் 60 முதல் 80 அணு ஆயுதங்களையும் தங்களிடம் வைத்துள்ளன."
இதில் இந்தியாவும் பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை தயாரிக்கும் இடங்களை மிகவும் ரகசியமாகவே வைத்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.உலகம் முழுவதும் 14 நாடுகளில் சுமார் 23,360 அணு ஆயுதங்கள் உள்ளன. அவற்றில் பாதியளவு செயல்படும் நிலையில் உள்ளன. ரஷ்யாவில் 13,000, அமெரிக்காவிடம் 9,400, பிரான்ஸ் நாட்டிடம் 300, சீனாவிடம் 240 அணு ஆயுதங்கள் உள்ளன. இந்த வரிசையில் பாகிஸ்தான் 7வது இடத்திலும் வட கொரியா கடைசி இடத்திலும் உள்ளன என்று கூறியுள்ளனர் விஞ்ஞானிகள்.
மனிதனின் மூளை
7 முதல் 12 வயதுடைய குழந்தைகளின் உடலில் செயற்கையாக வலியை உண்டாக்கி மூளையின் fMRI ஸ்கேன் எடுத்தார்கள். வலியை உணரும் மூளையின் பகுதியில் ஒரு ஒளிர்தல் காணப்பட்டது.
அடுத்தவர்களுக்கு வலியை ஏற்படுத்தும் வன்முறைக் காட்சியைப் பார்த்தபோதும் இந்தக் குழந்தைகளுக்கு மூளையின் அதே பகுதியில் ஒளிர்தல் காணப்பட்டது. அதாவது குழந்தைகள் அடுத்தவர்களுடைய வலியை தன்னுடைய வலியாக உணர்ந்தார்கள்.
மேலும், சமூக உணர்வுகள் மற்றும் நியாய அநியாயங்களுக்குப்பொறுப்பான மூளையின் பகுதியான the medial prefrontal cortex and the temporoparietal junction களிலும் ஒளிர்தல் காணப்பட்டன.அதாவது அடுத்தவர்களுக்கு வலி ஏற்படுத்துவது தவறு என்ற உணர்வை இயல்பிலேயே குழந்தைகள் பெற்றிருந்தார்கள்.
இதனால்தான் குழந்தைகளை தெய்வங்கள் என்கிறோம். ஆனால் இயல்பிலேயே முரடர்களாக இருக்கும் குழந்தைகளை முரட்டு தெய்வங்கள் என்கிறார்கள் விஞ்ஞானிகள். ஏனென்றால், இவர்கள் அடுத்தவர்களுக்கு வலியை ஏற்படுத்தி அதில் சுகம் காணுகிறார்கள்.
சிகாகோ பல்கலைக்கழக விஞ்ஞானிகள் மூளையை fMRI ஸ்கேன் செய்து இந்த முடிவை எட்டியிருக்கிறார்கள். ஆளுமையை வெளிப்படுத்தும் ஆய்வுகளில் முதல் முறையாக fMRI ஸ்கேன் பயன்படுத்தப்பட்டுள்ளதாக சிகாகோ பல்கலைக்கழக மனநலம் மற்றும் மனோதத்துவ பேராசிரியர் ஜீன் டெசிட்டி கூறுகிறார்.
குற்றச்செயல்களிலும், வன்முறைகளிலும் ஈடுபடும் பிறழ்மனம் கொண்ட இளையோருக்கு சிகிச்சையளிப்பதில் இந்த ஆய்வு உதவுகிறது. மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் மூளையின் பகுதிக்கு amygdala and ventral striatum என்று பெயர்.
மனிதர்களின் சுயகட்டுப்பாட்டை நிர்ணயிக்கும் மூளையின் பகுதிக்கு the medial prefrontal cortex and the temporoparietal junction என்று பெயர்.
இந்த ஆய்வில் 16 முதல் 18 வயதுடைய எட்டு முரட்டு சுபாவமுடைய இளைஞர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் ஆயுதங்களை ஏந்தி சண்டையில் ஈடுபடுபவர்களாகவும், குற்றச்செயலகளில் ஈடுபடுபவர்களாகவும் இருந்தனர்.
இதே வயதுடைய இயல்பான எட்டு இளைஞர்களும் ஆய்விற்கு தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
அடுத்தவருடைய காலை வேண்டுமென்றே ஒருவர் மிதித்து வலிஉண்டாக்குவது போன்ற வீடியோ காட்சி இரண்டு குழுக்களுக்கும் தனித்தனியே போட்டுக் காட்டப்பட்டது. காட்சியைப் பார்க்கும்போது அவர்களின் மூளை fMRI ஸ்கேன் எடுக்கப்பட்டது.
முரட்டுசுபாவம் உடைய இளைஞர்களின் மூளையில்மட்டும் amygdala and ventral striatum நரம்பணுத்தொகுதிகளில் ஒளிர்தல் காணப்பட்டது. அதாவது முரடனுக்கு வன்முறைக் காட்சிகளால் மகிழ்ச்சி ஏற்பட்டது. the medial prefrontal cortex and the temporoparietal junction பகுதியில் அதுபோன்ற ஒளிர்தல் ஏதும் காணப்படவில்லை. அதாவது நியாயம்-அநியாயம் பற்றிய எந்த உணர்வும் அவர்களுக்கு ஏற்படவில்லை.
இயல்பான சுபாவம் உடைய இளைஞர்களின் மூளையின் the medial prefrontal cortex and the temporoparietal junction பகுதியில் மட்டும் ஒளிர்தல் காணப்பட்டது. amygdala and ventral striatum என்ற மூளையின் பகுதியில் ஒளிர்தல் ஏதும் காணப்படவில்லை.
ஆக, பிறக்கும்போது தெய்வமாக இருந்தவன் போகப்போக, முரட்டு தெய்வமாக மாறிப்போகிறான். அதாவது, மிருகமாக மாறிப் போகிறான் என்பதுதான் இன்றைய அறிவியல் நமக்கு உணர்த்தும் உண்மை.
இன்னும் படிக்க:
(http://www.sciencedaily.com/releases/2008/11/081107071816.htm)
நலிந்தோருக்கு ஒரு திட்டம்
தமிழக அரசின் ஒரு திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டுள்ளது. இரக்ககுணம்
உடைய எவரும் வரவேற்க வேண்டிய திட்டம் இது.
இந்த திட்டத்தின் பெயர் "முதலமைச்சர் இளம் சிறார் இருதய பாதுகாப்புத் திட்டம்"
இருதயத்தில் குறைபாடு உள்ள இளம் சிறார்கள் பள்ளியிலேயே சோதனை செய்து
கண்டறியப்படுகிறார்கள்.
சாதாரண இருதய மருத்துவ சிகிச்சைக்கு 10,000 ரூபாயும்
சாதாரண திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு 60,000 ரூபாயும்
சிக்கலான திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு 70,000 ரூபாயும் அரசு வழங்குகிறது.
சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் அவர்கள் விரும்பும் மருத்துவ மனைகளில்
அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்பது ஒரு நல்ல விஷயம்.
இந்ததிட்டத்தை அனைத்து தொண்டு நிறுவனங்களும் கண்காணித்து ஒருங்கிணைத்து நடத்தவேண்டும்.
இந்த திட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களும், மருத்துவ மனைகளும் முழு ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும்.
இதுவே நாகரிக உலகத்தின் வேண்டுகோளாகும்
உடைய எவரும் வரவேற்க வேண்டிய திட்டம் இது.
இந்த திட்டத்தின் பெயர் "முதலமைச்சர் இளம் சிறார் இருதய பாதுகாப்புத் திட்டம்"
இருதயத்தில் குறைபாடு உள்ள இளம் சிறார்கள் பள்ளியிலேயே சோதனை செய்து
கண்டறியப்படுகிறார்கள்.
சாதாரண இருதய மருத்துவ சிகிச்சைக்கு 10,000 ரூபாயும்
சாதாரண திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு 60,000 ரூபாயும்
சிக்கலான திறந்த இருதய அறுவை சிகிச்சைக்கு 70,000 ரூபாயும் அரசு வழங்குகிறது.
சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்ட மாணவ, மாணவிகள் அவர்கள் விரும்பும் மருத்துவ மனைகளில்
அறுவை சிகிச்சை செய்துகொள்ளலாம் என்பது ஒரு நல்ல விஷயம்.
இந்ததிட்டத்தை அனைத்து தொண்டு நிறுவனங்களும் கண்காணித்து ஒருங்கிணைத்து நடத்தவேண்டும்.
இந்த திட்டத்தில் ஈடுபடும் மருத்துவர்களும், மருத்துவ மனைகளும் முழு ஈடுபாட்டுடன் செயல்படவேண்டும்.
இதுவே நாகரிக உலகத்தின் வேண்டுகோளாகும்
தோழர் சதீஷ் குமார்
கார்பன் டை ஆக்சைடு நல்ல வாயுவா ?
காற்று மண்டலத்தில் இருக்கும் பசுமைக்குடில் வாயுக்களில் (green house gases) கார்பன்
டை ஆக்சைடும் ஒன்று என்று பார்த்தோம் இல்லையா? கார்பன் டை ஆக்சைடு பூமி
வெப்பமடைய காரணமாக இருக்கிறது என்பதால் அதை தீமை செய்யும் வாயு என்று
தீர்மானித்துவிட முடியுமா?
தாவரங்கள் தங்களுடைய உணவிற்காக யாரிடமும் போய் கையேந்துவதில்லை.
சூரியஒளி, பச்சையம், கார்பன் டை ஆக்சைடு, நீர் இவற்றின் உதவியால் தங்களுக்கு
தேவையான உணவை தாங்களாகவே தயாரித்துக்கொள்ளும் ஆற்றல் தாவரங்களுக்கு
இருக்கிறது. இதைத்தான் ஒளிச்சேர்க்கை என்கிறோம். ஒளிச்சேர்க்கையின்போது
காற்று மண்டல கார்பன், தாவரங்களில் தங்கிவிடுகிறது. தாவரங்களை எரிக்கும்போது
கரி என்னும் கார்பன் மீளவும் நமக்குக் கிடைப்பது இப்படித்தான்.
காற்றுமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும்போது, ஒளிச்சேர்க்கை
யின் அளவு அதிகரித்து தாவரங்களின் வளர்ச்சி வேகமும் அதிகரிக்கிறது என்கிறார்கள்
விஞ்ஞானிகள். அதாவது தாவரங்கள் அழியும் வேகத்தை விட வளரும் வேகம் அதிகமாம்.
இதில் ஒரு சோகமான செய்தி என்னவென்றால் தாவரங்கள் சாப்பிடும் கார்பன் டை ஆக்சைடு
வாயுவின் அளவைக்காட்டிலும் அதிகமான அளவில் கார்பன் டை ஆக்சைடு காற்றுக்குள்
திணிக்கப்படுகிறது.
வட அமெரிக்காவிலும், கனடாவிலும் செல்போன் கோபுரங்களையும், விமான நிலைய
கோபுரங்களையும் பயன்படுத்தி வெவ்வேறு இடங்களில் காற்றில் இருக்கும் கார்பன் டை
ஆக்சைடின் அளவைக் கண்டறிந்தனர். என்கெல்லாம் கார்பன் டை ஆக்சைடின் அளவு
அதிகமாக இருந்ததோ அங்கெல்லாம் தாவரங்களின் வளர்ச்சியும் அதிகமாக இருப்பதை
விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதனால் நாம் மகிழ்ச்சியடைந்து விடக்கூடாது. தாவரங்கள் சாப்பிடும் கார்பன் டை ஆக்சைடின்
அளவைக்காட்டிலும் அதிகமான அளவிற்கு கார்பன் டை ஆக்சைடை காற்றுமண்டலத்திற்குள்
நாம் திணிக்கிறோம் என்பதும், இதன்காரணமாக புவிவெப்பம் அதிகரித்திருக்கிறது என்பதும்
நமக்கு நினைவில் இருக்கவேண்டும்.
இன்னும் படிக்க...
டை ஆக்சைடும் ஒன்று என்று பார்த்தோம் இல்லையா? கார்பன் டை ஆக்சைடு பூமி
வெப்பமடைய காரணமாக இருக்கிறது என்பதால் அதை தீமை செய்யும் வாயு என்று
தீர்மானித்துவிட முடியுமா?
தாவரங்கள் தங்களுடைய உணவிற்காக யாரிடமும் போய் கையேந்துவதில்லை.
சூரியஒளி, பச்சையம், கார்பன் டை ஆக்சைடு, நீர் இவற்றின் உதவியால் தங்களுக்கு
தேவையான உணவை தாங்களாகவே தயாரித்துக்கொள்ளும் ஆற்றல் தாவரங்களுக்கு
இருக்கிறது. இதைத்தான் ஒளிச்சேர்க்கை என்கிறோம். ஒளிச்சேர்க்கையின்போது
காற்று மண்டல கார்பன், தாவரங்களில் தங்கிவிடுகிறது. தாவரங்களை எரிக்கும்போது
கரி என்னும் கார்பன் மீளவும் நமக்குக் கிடைப்பது இப்படித்தான்.
காற்றுமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் அளவு அதிகரிக்கும்போது, ஒளிச்சேர்க்கை
யின் அளவு அதிகரித்து தாவரங்களின் வளர்ச்சி வேகமும் அதிகரிக்கிறது என்கிறார்கள்
விஞ்ஞானிகள். அதாவது தாவரங்கள் அழியும் வேகத்தை விட வளரும் வேகம் அதிகமாம்.
இதில் ஒரு சோகமான செய்தி என்னவென்றால் தாவரங்கள் சாப்பிடும் கார்பன் டை ஆக்சைடு
வாயுவின் அளவைக்காட்டிலும் அதிகமான அளவில் கார்பன் டை ஆக்சைடு காற்றுக்குள்
திணிக்கப்படுகிறது.
வட அமெரிக்காவிலும், கனடாவிலும் செல்போன் கோபுரங்களையும், விமான நிலைய
கோபுரங்களையும் பயன்படுத்தி வெவ்வேறு இடங்களில் காற்றில் இருக்கும் கார்பன் டை
ஆக்சைடின் அளவைக் கண்டறிந்தனர். என்கெல்லாம் கார்பன் டை ஆக்சைடின் அளவு
அதிகமாக இருந்ததோ அங்கெல்லாம் தாவரங்களின் வளர்ச்சியும் அதிகமாக இருப்பதை
விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
இதனால் நாம் மகிழ்ச்சியடைந்து விடக்கூடாது. தாவரங்கள் சாப்பிடும் கார்பன் டை ஆக்சைடின்
அளவைக்காட்டிலும் அதிகமான அளவிற்கு கார்பன் டை ஆக்சைடை காற்றுமண்டலத்திற்குள்
நாம் திணிக்கிறோம் என்பதும், இதன்காரணமாக புவிவெப்பம் அதிகரித்திருக்கிறது என்பதும்
நமக்கு நினைவில் இருக்கவேண்டும்.
இன்னும் படிக்க...
கல்வி தீண்டாமை ஒழிவது எப்போது ?
‘மாப்பிள்ளை என்ன தொழில் பண்ணிக்கிட்டிருக்காரு?’
‘நட்டமில்லாத தொழில்’
‘நகை வியாபாரமா? அதிலேதான் வாங்குனாலும் லாபமாம். விற்றாலும் லாபமாம்.’
‘அந்தத் தொழில் இல்லீங்க’
‘அப்படின்னா, டாஸ்மாக் கடையில் பார் நடத்திக்கிட்டிருக்காரா? அதுதான் எந்த சீசனிலும் டல்லடிக்காத வியாபாரம்.’
‘அதுவும் இல்லீங்க’
‘வேற என்ன? அரசியல் கட்சியில பொறுப்பிலே இருக்காரா?’
‘அதிலே கூட அஞ்சு வருஷம் லாபம். அப்புறம் அஞ்சு வருஷம் நட்டம். நம்ம மாப்பிள்ளை செய்றது நட்டமில்லாத தொழில்.’
‘அப்படியென்ன தொழில் செய்றாரு’
‘ஸ்கூல் நடத்திக்கிட்டிருக்காரு. இங்கிலீசு மீடியம். மெட்ரிகுலேஷன் படிப்பு’
‘உடனே தாம்பூலத் தட்டை மாத்துங்க. அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை முடிச்சிடலாம்.’
‘பொண்ணு வருகிற ராசியில மாப்பிள்ளை சீக்கிரமா இன்ஜினியரிங் காலேஜ், மெடிக்கல் காலேஜெல்லாம் ஆரம்பிச்சிடணும்.’
‘நட்டமில்லாத தொழிலாக' வருமானத்தை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறது கல்வி விபாபாரம். நர்சரி பள்ளிகளில் தொடங்கி மருத்துவக் கல்லூரிகள் வரை சரஸ்வதியை இலட்சுமியாக்கி வியாபாரம் ‘செய்து கொண்டிருக்கிறார்கள் ‘கல்வி வள்ளல்கள்.'
கல்வி வள்ளல்களின் பழைய வரலாற்றைப் புரட்டினால் அரசியல்வாதியாகத் தெரிவார்கள். இன்னும் சில பக்கங்களைப் புரட்டினால் சாராய வியாபாரியாகவோ, கந்து வட்டிக்காரர்களாகவோ, உள்ளூர் ரவுடிகளாகவோ இருந்தது தெரியவரும். வரலாற்றின் பக்கங்களை மாணவர்களே புரட்ட விரும்பாத இந்த தொழில் நுட்ப யுகத்தில், தங்களின் பழைய வரலாறு வெளியே வராமல் வியாபாரத்தை சிறப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் கல்வி வள்ளல்கள்.
‘அனைவருக்கும் கல்வி' என்றொரு திட்டம் இருக்கிறது. ‘சர்வ சிக்ஷ அபியான்' என்ற பெயரில் அது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக அளித்தாக வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். ஆனால், நடைமுறையில் அனைவருக்கும் சமச்சீரான கல்வி கிடைக்கிறதா? பிளாக் போர்டு மட்டுமே இருக்க வேண்டிய பள்ளிக்கூடங்களில் ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு என புடவைக் கடைபோல ரக ரகமான கல்வி வியாபாரங்கள், பட்டுப்புடவை கட்டுகிற பெண்மணி பணக்காரர் என்றும், சாதாரண நூல் புடவை கட்டுகிறவர்கள் ஏழைகள் என்றும் தரம் பிரிக்கப்பட்டிருப்பது போல, சென்ட்ரல் போர்டில் படிப்பவர்கள் உசத்தியானவர்களாகவும், ஸ்டேட் போர்டில், அதுவும் தமிழ் மீடியத்தில், அதிலும் மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளில் படிப்பவர்கள் என்றால் ரொம்பவும் தாழ்ந்தவர்களாகவும் வேறுபடுத்திப் பார்க்கப்படுகிறார்கள்.
‘உங்கள் பையன் எங்கே படிக்கிறான்? டி.ஏ.வியிலா, கேந்திரிய வித்யாவிலா, வேலம்மாள் ஸ்கூலா?’
‘இல்லீங்க. வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு நல்ல பள்ளிக்கூடம் இருக்கு. அங்கேதான் படிக்கிறான்.’
‘அய்யய்யோ... அவனை பாழாக்கிடாதீங்க.’
‘இல்லையே நல்லா படிக்கிறானே... மார்க்கு வாங்குறானே?’
‘அதைவிட ஸ்கூல் முக்கியம்ங்க. பெரிய ஸ்கூலா சேர்த்துவிடுங்க. அவன் ஃப்யூச்சரை வீணடிச்சிடாதீங்க.’
மாணவர்கள் என்ன படிக்கிறார்கள், எப்படிப் படிக்கிறவர்கள் என்பதைவிடவும் எங்கே படிக்கிறார்கள் என்பதே முக்கியமாகிவிட்டது. ஊடகங்களில் விளம்பரம் செய்கின்ற அளவுக்கோ, கல்வித்துறையில் சரியான ஆட்களைப் பிடித்து பொதுத் தேர்வில் முதலிடம் பெறுகின்ற திறமையோ இருக்குமானால் அது சிறந்த பள்ளி என்கிற பொதுப்புத்தி இங்கே பரவிக் கிடக்கிறது. அதிலிருந்து பெற்றோர்களை மீட்பதே பெரும்பாடாக இருக்கும்போது, மாணவர்களை எங்ஙனம் மீட்பது?
இந்திய அரசாங்கத்தின் காசில் படித்துவிட்டு, வெளிநாட்டுக்குப் போய் கை நிறைய சம்பாதித்தவனின், தேசபக்தியைத் தவிர, வேறெந்த உத்தியும் தெரியாமல் இங்கேயே படித்து, இங்கேயே மூட்டை தூக்கிப் பிழைக்கும் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு என்றால் ‘சமத்துவம் கெட்டுப் போகும்' என்று புதிய நீதி வழங்குகிறது. ‘ஜாதிகளின் அடிப்படையில் மனிதர்களின் நிலை வகிக்கும் வழக்கம் மட்டும் எந்த நாட்டிலாவது இருக்கிறதா?’ என்று எவ்வளவுதான் நாம் உரக்கக் குரல் எழுப்பியும் காதில் விழப் போவதில்லை.
‘டேய்... அங்கிள்கிட்டே ரைம்ஸ் சொல்லு’
‘டாடி சொன்ன மாதிரி ரைம்ஸ் சொல்லு பாப்பா’
‘சொல்றேன் அங்கிள்... ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’
‘டேய்... அங்கிள்கிட்டே உன்னை தமிழ் ரைம்ஸா சொல்லச் சொன்னேன். இங்கிலீஸ் ரைம்ஸ் சொல்லு.’
‘ஹிக்கிரி டிக்கிரி டாக். த மவுஸ் ரேன் ஆப் த கிளாக்...’
‘வெரிகுட்... வெரிகுட்’
இப்படி சில கிறுக்கு ‘டாடி'களும், கேனை ‘அங்கிள்'களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஓடி விளையாடு பாப்பா பாட்டைவிட, ஹிக்கிரி டிக்கிரி டாக்கில் குழந்தைகளுக்கு என்ன பெரிய கருத்து போதிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. ஆனாலும் தமிழ்ப் பாட்டை பாடிக் காட்டுவதைவிட, இங்கிலீஸ் ரைம்ஸ் மனப்பாடம் செய்து சொன்னால் தான் பெருமை என்று நினைக்கின்ற டாடி, மம்மி, அங்கிள், ஆன்ட்டிகள் நிறையவே இருக்கிறார்கள்.
தாய்மொழிக் கல்வியை தரம் தாழ்ந்ததாக நினைக்கும் மனோபாவம் வேரூன்றியிருக்கிறது. தமிழ் மீடியம் என்றால் அது அரசாங்கம் நடத்துகின்ற பள்ளிக்குரியது என்றும், ஓட்டை பெஞ்ச்சும், ஒற்றை வாத்தியாரும் உள்ள பள்ளிகளில்தான் தமிழில் பாடம் நடத்துவார்கள் என்கிற மனநிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளின் அவலமான நிலையினாலும் தாய்மொழிக் கல்வி கற்றவர்களுக்கு எவ்வித முன்னுரிமையும் இல்லாமையினாலும் தமிழில் படித்த மாணவர்கள் ‘தீண்டத்தகாதவர்'களாக ஒதுக்கி வைக்கப்படும் கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமையைத் தடுக்க எந்த சட்டதிட்டங்களும் இல்லை.
தாய்மொழியில் படிப்பது எளிது என மாணவர்கள் நினைத்தாலும், தாய்மொழியில் படிப்பதற்கு அவர்கள் விரும்பினாலும் பிற மொழிகள் அவன் மீது கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன. அண்மையில் நடந்து முடிந்த ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் தாய்மொழியில் விடை எழுதியவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆங்கில மொழி தேவைப்படுவது தகவல் தொடர்பிற்காகத்தான். அவருடைய சிந்தனை என்பது தாய்மொழி சார்ந்தே அமையும். அதனால், தாய்மொழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுவதும் எளிதாக இருக்கும் என்கிற நடைமுறை உண்மையில் தாய்மொழியில் தேர்வு எழுதி வென்றவர்களையும், ஆங்கிலத்தில் அடிமை செய்யும் அரசு சேவகர்களாகத்தான் மாற்றப் போகின்றன இங்குள்ள சட்ட திட்டங்கள்.
*******
மொழித் தீண்டாமை மட்டுமின்றி, சாதித் தீண்டாமைக் கொடுமைகளும் இந்தியக் கல்வி நிலையங்களில் தலை விரித்தாடுகின்றன. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி சாவித்திரியின் குடும்பம் ஏழ்மையானதுதான். ஆனால் அவள் தன் பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல் கைவிட்டதற்கு காரணம், அந்த ஏழ்மையல்ல. 15 வயதான சாவித்திரியின் படிப்பு தடைப்பட்டதற்கு அவளது சக மாணவிகளும், அவள் படித்த பள்ளியின் ஆசிரியர்களின் நடவடிக்கைகளும்தான் காரணம். அவள் எப்போது வகுப்பறைக்குள் நுழைகிறாளோ அப்போது சக மாணவிகள் தங்கள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, ‘பள்கி என்று அழைத்து, பாட்டுப்பாடுவது ஏன்? மலம் அள்ளும் தொழிலைச் செய்வோரைத்தான் அந்த மாநிலத்தில் பள்கி என்று அழைக்கிறார்கள். சாவித்திரி, அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த மாணவி. வகுப்பில் இருக்கும் மற்ற மாணவிகளில் பெரும்பாலோர், ‘பால்மீகி' என்று சொல்லப்படும் உயர் சாதியினர். அதனால் சாவித்திரியைக் கேலி செய்வது அவர்களின் வாடிக்கை. அதனை ஆசிரியர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதாவது, அந்தக் கேலியை, மறைமுகமாக ஆதரிப்பார்கள்.
மலம் அள்ளும் தொழிலைச் செய்யும் பங்கி சமூகத்து பெண்கள் தங்கள் புடவைத் தலைப்பால் மூக்கைப் பொத்திக் கொண்டு வேலை செய்வது வழக்கம். எனவே சாவித்திரி வகுப்பறைக்குள் வரும்போது, சக மாணவிகள் தங்கள் கைக்குட்டையை புடவைத் தலைப்பு போலாக்கி, மூக்கைப் பொத்திக்கொண்டு கேலி செய்வார்கள். அதனைத் தாங்க முடியாமல் சாவித்திரி அழும்போது, ஆறுதல் சொல்லக்கூட ஆசிரியர்கள் முன் வரமாட்டார்கள். இதுதான் சாவித்திரி தனது படிப்பை பாதியில் நிறுத்தியதற்கு காரணம் என்கிறார், அப்பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த கல்வியாளர் விமலா ராமச்சந்திரன். சாதித் தீண்டாமை, மொழித் தீண்டாமை, பொருளாதாரத் தீண்டாமை என இந்திய கல்வி நிலையங்கள் மாணவ சமுதாயத்தை பிரித்தாண்டு கொண்டிருக்கின்றன.
அரசுகளின் கல்வித் திட்டங்களாலும், பெற்றோரின் எல்லை தாண்டிய கனவு பயங்கரவாதத்தாலும் பொதி சுமக்கும் கழுதைகளாய் ஆகிப்போன குழந்தைகளை மீட்டு, அவர்கள் விரும்புகிற கல்வியைத் தரமாகக் தருவதற்கான முயற்சிகள் மிகக் குறைந்த அளவிலேயே நடைமுறையில் உள்ளன.
அனைவருக்கும் கல்வி என்பது அனைவருக்கும் சமமான கல்வி, அதுவும் முழுமையாகக் கட்டணமில்லாத கல்வி என்கிற நிலைமை ஏற்படுத்தப்படும்போதுதான் கல்வித் தீண்டாமை களையப்படும்.
நன்றி: கோவி.லெனின் (விழிப்புணர்வு)
‘நட்டமில்லாத தொழில்’
‘நகை வியாபாரமா? அதிலேதான் வாங்குனாலும் லாபமாம். விற்றாலும் லாபமாம்.’
‘அந்தத் தொழில் இல்லீங்க’
‘அப்படின்னா, டாஸ்மாக் கடையில் பார் நடத்திக்கிட்டிருக்காரா? அதுதான் எந்த சீசனிலும் டல்லடிக்காத வியாபாரம்.’
‘அதுவும் இல்லீங்க’
‘வேற என்ன? அரசியல் கட்சியில பொறுப்பிலே இருக்காரா?’
‘அதிலே கூட அஞ்சு வருஷம் லாபம். அப்புறம் அஞ்சு வருஷம் நட்டம். நம்ம மாப்பிள்ளை செய்றது நட்டமில்லாத தொழில்.’
‘அப்படியென்ன தொழில் செய்றாரு’
‘ஸ்கூல் நடத்திக்கிட்டிருக்காரு. இங்கிலீசு மீடியம். மெட்ரிகுலேஷன் படிப்பு’
‘உடனே தாம்பூலத் தட்டை மாத்துங்க. அடுத்த முகூர்த்தத்திலேயே கல்யாணத்தை முடிச்சிடலாம்.’
‘பொண்ணு வருகிற ராசியில மாப்பிள்ளை சீக்கிரமா இன்ஜினியரிங் காலேஜ், மெடிக்கல் காலேஜெல்லாம் ஆரம்பிச்சிடணும்.’
‘நட்டமில்லாத தொழிலாக' வருமானத்தை அள்ளிக் கொட்டிக் கொண்டிருக்கிறது கல்வி விபாபாரம். நர்சரி பள்ளிகளில் தொடங்கி மருத்துவக் கல்லூரிகள் வரை சரஸ்வதியை இலட்சுமியாக்கி வியாபாரம் ‘செய்து கொண்டிருக்கிறார்கள் ‘கல்வி வள்ளல்கள்.'
கல்வி வள்ளல்களின் பழைய வரலாற்றைப் புரட்டினால் அரசியல்வாதியாகத் தெரிவார்கள். இன்னும் சில பக்கங்களைப் புரட்டினால் சாராய வியாபாரியாகவோ, கந்து வட்டிக்காரர்களாகவோ, உள்ளூர் ரவுடிகளாகவோ இருந்தது தெரியவரும். வரலாற்றின் பக்கங்களை மாணவர்களே புரட்ட விரும்பாத இந்த தொழில் நுட்ப யுகத்தில், தங்களின் பழைய வரலாறு வெளியே வராமல் வியாபாரத்தை சிறப்பாகக் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள் கல்வி வள்ளல்கள்.
‘அனைவருக்கும் கல்வி' என்றொரு திட்டம் இருக்கிறது. ‘சர்வ சிக்ஷ அபியான்' என்ற பெயரில் அது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்தியாவின் உள்ள அனைத்துக் குழந்தைகளுக்கும் ஆரம்பக் கல்வியைக் கட்டாயமாக அளித்தாக வேண்டும் என்பதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம். ஆனால், நடைமுறையில் அனைவருக்கும் சமச்சீரான கல்வி கிடைக்கிறதா? பிளாக் போர்டு மட்டுமே இருக்க வேண்டிய பள்ளிக்கூடங்களில் ஸ்டேட் போர்டு, சென்ட்ரல் போர்டு என புடவைக் கடைபோல ரக ரகமான கல்வி வியாபாரங்கள், பட்டுப்புடவை கட்டுகிற பெண்மணி பணக்காரர் என்றும், சாதாரண நூல் புடவை கட்டுகிறவர்கள் ஏழைகள் என்றும் தரம் பிரிக்கப்பட்டிருப்பது போல, சென்ட்ரல் போர்டில் படிப்பவர்கள் உசத்தியானவர்களாகவும், ஸ்டேட் போர்டில், அதுவும் தமிழ் மீடியத்தில், அதிலும் மாநகராட்சி, நகராட்சிப் பள்ளிகளில் படிப்பவர்கள் என்றால் ரொம்பவும் தாழ்ந்தவர்களாகவும் வேறுபடுத்திப் பார்க்கப்படுகிறார்கள்.
‘உங்கள் பையன் எங்கே படிக்கிறான்? டி.ஏ.வியிலா, கேந்திரிய வித்யாவிலா, வேலம்மாள் ஸ்கூலா?’
‘இல்லீங்க. வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு நல்ல பள்ளிக்கூடம் இருக்கு. அங்கேதான் படிக்கிறான்.’
‘அய்யய்யோ... அவனை பாழாக்கிடாதீங்க.’
‘இல்லையே நல்லா படிக்கிறானே... மார்க்கு வாங்குறானே?’
‘அதைவிட ஸ்கூல் முக்கியம்ங்க. பெரிய ஸ்கூலா சேர்த்துவிடுங்க. அவன் ஃப்யூச்சரை வீணடிச்சிடாதீங்க.’
மாணவர்கள் என்ன படிக்கிறார்கள், எப்படிப் படிக்கிறவர்கள் என்பதைவிடவும் எங்கே படிக்கிறார்கள் என்பதே முக்கியமாகிவிட்டது. ஊடகங்களில் விளம்பரம் செய்கின்ற அளவுக்கோ, கல்வித்துறையில் சரியான ஆட்களைப் பிடித்து பொதுத் தேர்வில் முதலிடம் பெறுகின்ற திறமையோ இருக்குமானால் அது சிறந்த பள்ளி என்கிற பொதுப்புத்தி இங்கே பரவிக் கிடக்கிறது. அதிலிருந்து பெற்றோர்களை மீட்பதே பெரும்பாடாக இருக்கும்போது, மாணவர்களை எங்ஙனம் மீட்பது?
இந்திய அரசாங்கத்தின் காசில் படித்துவிட்டு, வெளிநாட்டுக்குப் போய் கை நிறைய சம்பாதித்தவனின், தேசபக்தியைத் தவிர, வேறெந்த உத்தியும் தெரியாமல் இங்கேயே படித்து, இங்கேயே மூட்டை தூக்கிப் பிழைக்கும் குடும்பத்துப் பிள்ளைகளுக்கு இடஒதுக்கீடு என்றால் ‘சமத்துவம் கெட்டுப் போகும்' என்று புதிய நீதி வழங்குகிறது. ‘ஜாதிகளின் அடிப்படையில் மனிதர்களின் நிலை வகிக்கும் வழக்கம் மட்டும் எந்த நாட்டிலாவது இருக்கிறதா?’ என்று எவ்வளவுதான் நாம் உரக்கக் குரல் எழுப்பியும் காதில் விழப் போவதில்லை.
‘டேய்... அங்கிள்கிட்டே ரைம்ஸ் சொல்லு’
‘டாடி சொன்ன மாதிரி ரைம்ஸ் சொல்லு பாப்பா’
‘சொல்றேன் அங்கிள்... ஓடி விளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’
‘டேய்... அங்கிள்கிட்டே உன்னை தமிழ் ரைம்ஸா சொல்லச் சொன்னேன். இங்கிலீஸ் ரைம்ஸ் சொல்லு.’
‘ஹிக்கிரி டிக்கிரி டாக். த மவுஸ் ரேன் ஆப் த கிளாக்...’
‘வெரிகுட்... வெரிகுட்’
இப்படி சில கிறுக்கு ‘டாடி'களும், கேனை ‘அங்கிள்'களும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஓடி விளையாடு பாப்பா பாட்டைவிட, ஹிக்கிரி டிக்கிரி டாக்கில் குழந்தைகளுக்கு என்ன பெரிய கருத்து போதிக்கப்படுகிறது என்பது தெரியவில்லை. ஆனாலும் தமிழ்ப் பாட்டை பாடிக் காட்டுவதைவிட, இங்கிலீஸ் ரைம்ஸ் மனப்பாடம் செய்து சொன்னால் தான் பெருமை என்று நினைக்கின்ற டாடி, மம்மி, அங்கிள், ஆன்ட்டிகள் நிறையவே இருக்கிறார்கள்.
தாய்மொழிக் கல்வியை தரம் தாழ்ந்ததாக நினைக்கும் மனோபாவம் வேரூன்றியிருக்கிறது. தமிழ் மீடியம் என்றால் அது அரசாங்கம் நடத்துகின்ற பள்ளிக்குரியது என்றும், ஓட்டை பெஞ்ச்சும், ஒற்றை வாத்தியாரும் உள்ள பள்ளிகளில்தான் தமிழில் பாடம் நடத்துவார்கள் என்கிற மனநிலை உருவாக்கப்பட்டிருக்கிறது. அரசுப் பள்ளிகளின் அவலமான நிலையினாலும் தாய்மொழிக் கல்வி கற்றவர்களுக்கு எவ்வித முன்னுரிமையும் இல்லாமையினாலும் தமிழில் படித்த மாணவர்கள் ‘தீண்டத்தகாதவர்'களாக ஒதுக்கி வைக்கப்படும் கொடுமை நிகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தக் கொடுமையைத் தடுக்க எந்த சட்டதிட்டங்களும் இல்லை.
தாய்மொழியில் படிப்பது எளிது என மாணவர்கள் நினைத்தாலும், தாய்மொழியில் படிப்பதற்கு அவர்கள் விரும்பினாலும் பிற மொழிகள் அவன் மீது கட்டாயமாகத் திணிக்கப்படுகின்றன. அண்மையில் நடந்து முடிந்த ஐ.ஏ.எஸ். தேர்வுகளில் தாய்மொழியில் விடை எழுதியவர்கள் குறிப்பிடத்தக்க அளவில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள். ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு ஆங்கில மொழி தேவைப்படுவது தகவல் தொடர்பிற்காகத்தான். அவருடைய சிந்தனை என்பது தாய்மொழி சார்ந்தே அமையும். அதனால், தாய்மொழியில் ஐ.ஏ.எஸ். தேர்வு எழுவதும் எளிதாக இருக்கும் என்கிற நடைமுறை உண்மையில் தாய்மொழியில் தேர்வு எழுதி வென்றவர்களையும், ஆங்கிலத்தில் அடிமை செய்யும் அரசு சேவகர்களாகத்தான் மாற்றப் போகின்றன இங்குள்ள சட்ட திட்டங்கள்.
*******
மொழித் தீண்டாமை மட்டுமின்றி, சாதித் தீண்டாமைக் கொடுமைகளும் இந்தியக் கல்வி நிலையங்களில் தலை விரித்தாடுகின்றன. குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த மாணவி சாவித்திரியின் குடும்பம் ஏழ்மையானதுதான். ஆனால் அவள் தன் பள்ளிக் கல்வியைத் தொடர முடியாமல் கைவிட்டதற்கு காரணம், அந்த ஏழ்மையல்ல. 15 வயதான சாவித்திரியின் படிப்பு தடைப்பட்டதற்கு அவளது சக மாணவிகளும், அவள் படித்த பள்ளியின் ஆசிரியர்களின் நடவடிக்கைகளும்தான் காரணம். அவள் எப்போது வகுப்பறைக்குள் நுழைகிறாளோ அப்போது சக மாணவிகள் தங்கள் முகத்தை வேறு பக்கம் திருப்பிக் கொண்டு, ‘பள்கி என்று அழைத்து, பாட்டுப்பாடுவது ஏன்? மலம் அள்ளும் தொழிலைச் செய்வோரைத்தான் அந்த மாநிலத்தில் பள்கி என்று அழைக்கிறார்கள். சாவித்திரி, அப்படிப்பட்ட குடும்பத்திலிருந்து வந்த மாணவி. வகுப்பில் இருக்கும் மற்ற மாணவிகளில் பெரும்பாலோர், ‘பால்மீகி' என்று சொல்லப்படும் உயர் சாதியினர். அதனால் சாவித்திரியைக் கேலி செய்வது அவர்களின் வாடிக்கை. அதனை ஆசிரியர்களும் கண்டுகொள்ள மாட்டார்கள். அதாவது, அந்தக் கேலியை, மறைமுகமாக ஆதரிப்பார்கள்.
மலம் அள்ளும் தொழிலைச் செய்யும் பங்கி சமூகத்து பெண்கள் தங்கள் புடவைத் தலைப்பால் மூக்கைப் பொத்திக் கொண்டு வேலை செய்வது வழக்கம். எனவே சாவித்திரி வகுப்பறைக்குள் வரும்போது, சக மாணவிகள் தங்கள் கைக்குட்டையை புடவைத் தலைப்பு போலாக்கி, மூக்கைப் பொத்திக்கொண்டு கேலி செய்வார்கள். அதனைத் தாங்க முடியாமல் சாவித்திரி அழும்போது, ஆறுதல் சொல்லக்கூட ஆசிரியர்கள் முன் வரமாட்டார்கள். இதுதான் சாவித்திரி தனது படிப்பை பாதியில் நிறுத்தியதற்கு காரணம் என்கிறார், அப்பகுதிகளுக்கு நேரில் சென்று ஆய்வு செய்த கல்வியாளர் விமலா ராமச்சந்திரன். சாதித் தீண்டாமை, மொழித் தீண்டாமை, பொருளாதாரத் தீண்டாமை என இந்திய கல்வி நிலையங்கள் மாணவ சமுதாயத்தை பிரித்தாண்டு கொண்டிருக்கின்றன.
அரசுகளின் கல்வித் திட்டங்களாலும், பெற்றோரின் எல்லை தாண்டிய கனவு பயங்கரவாதத்தாலும் பொதி சுமக்கும் கழுதைகளாய் ஆகிப்போன குழந்தைகளை மீட்டு, அவர்கள் விரும்புகிற கல்வியைத் தரமாகக் தருவதற்கான முயற்சிகள் மிகக் குறைந்த அளவிலேயே நடைமுறையில் உள்ளன.
அனைவருக்கும் கல்வி என்பது அனைவருக்கும் சமமான கல்வி, அதுவும் முழுமையாகக் கட்டணமில்லாத கல்வி என்கிற நிலைமை ஏற்படுத்தப்படும்போதுதான் கல்வித் தீண்டாமை களையப்படும்.
நன்றி: கோவி.லெனின் (விழிப்புணர்வு)
மனிதனும் சந்திரனில் குடியேறலாம்
நூறு நபர்களை சந்திரனில் குடியமர்த்த என்ன செலவாகும்? 15 பில்லியன் டாலர்கள் செலவாகுமாம்.
ஒரு மனிதன் ஓர் ஆண்டில் சாப்பிடும் உணவின் எடை 450 பவுண்டுகள். 100 பேர்களுக்குத் தேவையான உணவை சந்திரனுக்கு கொண்டு செல்ல அதிகம் செலவாகும் என்பதால் சந்திரனிலேயே உணவை விளைவித்துக்கொள்ள முடியுமா? முடியும்.
விவசாயம் செய்வதற்கு கார்பன், நைட்ரஜன், ஆக்சிஜன், ஹைட்ரஜன், பொட்டாசியம், பாஸ்பரஸ் ஆகிய தனிமங்கள் தேவை. இந்த தனிமங்களைக் ஒருமுறை சந்திரனுக்கு கொண்டு சென்று விவசாயம் செய்துவிட்டால் போதுமாம். சந்திரனில் குடியிருக்கும் மனிதர்களின் கழிவுகளில் இருந்து மறு சுழற்சி முறையில் அடுத்தடுத்த சாகுபடிகளுக்கு இந்த தனிமங்களை பெற்றுக்கொள்ளலாம் என்கிறார்கள் விஞ்ஞானிகள்
காற்றடைத்த குடியிருப்புகள்தான் தொடக்கத்தில் பயன்படுத்தப்படுமாம். செராமிக் மற்றும் உலோகங்களைப் பயன்படுத்தி வீடுகளை அமைக்க ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சந்திரனில் மின்சக்தி தட்டுப்பாடு இருக்காது போல் தோன்றுகிறது. சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் மின்சாரமும், ஹைட்ரஜன் ஆக்சிஜன் சேர்க்கையால் பெறப்படும் மின்சாரமும் தடையின்றி கிடைக்க வாய்ப்பு இருக்கிறது. சந்திரனில் கிடைக்கக்கூடிய யுரேனியத்திலிருந்து அணுமின்சக்தி பெறவும் வாய்ப்பு இருக்கிறது.
இவ்வளவு வசதிகள் இருந்தும் சந்திரனில் மனிதன் குடியேற இன்னும் என்ன தடை?
முதல் குடியிருப்பை தொடங்குவதில்தான் தடை.
சந்திரனுக்கு போகும் மனிதனின் எடை 200 பவுண்டுகள்.
முதன்முதலாக உணவிற்காக கொண்டு செல்லப்படும் தனிமங்கள் 500 பவுண்டுகள்.
தங்குமிடமும், கருவிகளும் 1,000 பவுண்டுகள்.
உற்பத்திசெய்யும் கருவிகள் 1,000 பவுண்டுகள்.
ஏறத்தாழ ஆள் ஒன்றுக்கு 3000 பவுண்டு வீதம் 100 பேருக்கு 300,000 பவுண்டு எடை சந்திரனுக்கு கொண்டு செல்லப்படவேண்டும். ஒரு பவுண்டு எடையை சந்திரனுக்கு சுமந்து செல்ல 50,000 டாலர்கள் செலவு பிடிக்கிறது. ஆக, 15 பில்லியன் டாலர் இருந்தால் சந்திரனில் நூறுபேர்கள் கொண்ட ஒரு காலனி அமைப்பதைப்பற்றி சிந்திக்கலாம்.
செலவுக்கணக்கு இத்துடன் முடிந்து விடவில்லை. விண்வெளிநிலையத்தை ஏற்றி இறக்குதல், ஆட்களைத்திரட்டுதல், பயிற்சியளித்தல், நிர்வாகம், விலைவாசி ஏற்றத்தாழ்வுகள், அனாமத்து இனங்கள் என்று எல்லா செலவுகளையும் கூட்டிக்கழித்துப்பார்த்தால் பலநூறு பில்லியன் டாலர்கள் செலவழித்தால் தான் சாத்தியப்படும்.
மனிதன் இதைச் செய்வானா?
மனிதன் எதையும் செய்வான்.
இன்னும் படிக்க...
http://science.howstuffworks.com/what-if-moon-colony.htm
உறங்கி போன மின்சார வாரியமும் , உறங்காத தமிழ் மக்களும்
மின்சார உற்பத்தியில் மிகை மாநிலமாக இருந்த தமிழகத்தை மின்பற்றாக்குறை மாநிலமாக்கியுள்ளது தி.மு.க ஆட்சி " சொல்பவர் ஜெயலலிதா."சென்ற அ.தி.மு.க ஆட்சி காலத்தில் மின்சார உற்பத்திக்காக எந்த திட்டமும் செயல்படுத்தாமல் விட்டது தான் இப்போதைய மின்சாரதட்டுப்பாட்டுக்கு காரணம்" பதில் சொல்பவர் ஆற்காடு வீராச்சாமி.
பரவாயில்லை. பதில்சொல்லும் ஒரு அமைச்சர் கிடைத்திருக்கிறார் மின்வாரியத்துக்கு.
தலைமைச்செயலர் கூறுவதையும் படித்துவைப்போம்.
"மின்சார தட்டுப்பாடு தற்காலிகமானதுதான். மழைக்காலம் தொடங்கியபிறகு மின் தட்டுப்பாடு நீங்கிவிடும். பருவமழை 15 நாட்களுக்கு முன்பே தொடங்கிவிட்டது. நிலைமை சீரடையும் என்று எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறோம்."
புள்ளிவிவரம் கொடுப்பதுதான் அதிகாரியின் லட்சணம் என்பதை நினைவில் கொள்க.
தொழிற்சாலைகளில் உற்பத்தி நிறுத்தம் அமல் செய்யப்பட்டுள்ளதே, அது விலக்கிக்கொள்ளபடுமா என்ற கேள்விக்கு "நாங்கள் நம்புகிறோம் " என்கிறார்.
அதிகாரிகளுக்கே உரிய சுருக்கமான பதில்.
மற்ற மாநிலங்களை விட தமிழ்நாடு பரவாயில்லையாம். அரசாங்கம் தன்னால் ஆகக்கூடியதெல்லம் செய்கிறதாம். தேசிய மின் தொகுப்பில் இருந்து மின்சாரம் பெறுவதில் சிரமம் இருக்கிறதாம்.
தேசியத்திற்குள்தான் தமிழ்நாடும் இருக்கிறது என்று தமிழர்கள் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்.
அனைவருமே பல உண்மைகளை மறைத்து, மக்களை திசைதிருப்பவே அறிக்கை யுத்தம் நடத்துகின்றனர். மின்சார உற்பத்தியில் தமிழகம் எப்போது மிகை மாநிலமாக இருந்தது...?
ஜெயலலிதா ஆட்சி செய்த 10 ஆண்டு காலத்தில் மின்உற்பத்திக்காக தொலைநோக்குத் திட்டங்கள் எத்தனை போடப்பட்டன?
கருணாநிதி தலைமையில் தி.மு.க ஆட்சி செய்த சுமார் 14 ஆண்டுகளில் தொலைநோக்குப் பார்வையுடன் எத்தனை மின்உற்பத்தி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன?
இரண்டு கேள்விகளுக்குமே ஒரே விடை, இரு கழகங்களின் ஆட்சிகளிலுமே தமிழகம் மெல்ல, மெல்ல இருளுக்குள் தள்ளப்பட்டது என்பது தான்!
கருணாநிதி ஆட்சியிலிருந்த காலகட்டத்திலும் சரி, ஜெயலலிதா ஆட்சி யிலிருந்த காலகட்டத்திலும் சரி தமிழக மின்உற்பத்தி சுமார் 10 முதல் 30 சதவிகிதம் மட்டுமே அதிகரித்தது.
பெருந்தலைவர் காமராஜர் ஆட்சியிலிருந்த ஒவ்வொரு ஐந்தாண்டுகாலத்திலும் சுமார் 120 சதவிகிதம் மின் உற்பத்தியை அதிகப்படுத்தினார். இத்தனைக்கும் அவர் ஆட்சி செய்த கால கட்டத்தில் தொழிற்சாலைகளின் வளர்ச்சி இப்போதைய காலத்தைப் போல் இவ்வளவு வேகமான விஸ்வரூப வளர்ச்சியை காணவில்லை.
மின் உற்பத்திக்கான திட்டங்கள் என்பவை காலங் கனிந்து பயன்தரக்கூடியவை. அதாவது இப்போது முதலீடு செய்தால் குறைந்தது ஆறேழுவருடங்கள் கழித்துதான் அறுவடை செய்யலாம். அப்போது ஆட்சி மாறிப் போனால் அது புதிய ஆட்சிக்கு பெயர் தந்துவிடுமே.... என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.

மக்கள் நலன், நாட்டுமுன்னேற்றம் சார்ந்த தொலைநோக்கு திட்டங்கள் இவற்றையெல்லாம் யோசிக்கக்கூடாது. உடனடியாக மக்கள் பலனடைய வேண்டும். அதன் காரணமாக ஓட்டுகளை குவிக்கவேண்டும் என்பதற்காக இலவசங்களை அள்ளி இறைக்கும் திட்டங்களுக்கே நிதியை திருப்பிவிடலாம் என்பதே இரு கழகங்களின் நடைமுறையாக இருந்துள்ளது.
இது மட்டுமல்ல, மின் வாரியத்தில் 'ஷாக்' அடிக்கும் படியான நிர்வாக சீர்கேடுகளும் வேறு மலிந்துவிட்டன. இதன் விளைவாக உற்பத்தியாக வேண்டிய மின்சாரமே கூடதடைபட்டுள்ளது.
பகலில் ஆலைகளை இயக்காமல் இரவில் இயக்குங்கள்;
வாரத்துக்கு ஒருமுறை எந்திர இயக்கத்தை நிறுத்தி வையுங்கள்.''
தமிழக மின்துறை அமைச்சர் வைத்துள்ள வேண்டுகோள்கள்.
1960களில் அன்றைய பிரதமர் லால்பகதூர் சாஸ்திரி ""வாரத்துக்கு ஒருநாள் பட்டினி கிடப்பீர்'' என்று நாட்டு மக்களுக்குச் செய்த உபதேசத்துக்குச் சற்றும் குறையாத பொறுப்பற்ற யோசனைகளே இவை.
பொன்விழா கொண்டாடிய தமிழ்நாடு மின்சார வாரியம், தமிழகத்தின் தேவையைவிட அதிகமாக மின்னுற்பத்தி செய்வதாக நாட்காட்டிகளில் கூடச் சாதனையாக அறிவித்துள்ளது. அமைச்சர் வீராசாமியே பலமுறை இதனைப் பெருமையாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் நடைமுறையில், உண்மை நிலவரமோ வேறுவிதமாக உள்ளது.
கடந்த மூன்று மாதங்களாக தமிழகமெங்கும் அறிவிப்பின்றியே அடிக்கடி மின்சாரம் நிறுத்தப்படுகிறது. ஏற்கெனவே நேரம் தவறி விவசாயத்துக்கு வழங்கப்பட்டு வந்த மின்சாரமும் அடிக்கடி மின்தடையால் நின்று போய், நீர்ப்பாய்ச்சலின்றி விவசாயம் தத்தளிக்கத் தொடங்கியுள்ளது.
மாநிலத்தின் பல பகுதிகள் குடிநீர்த் தட்டுப்பாட்டினால் தவிக்கின்றன. பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வுக்கு ஆதாரமான நெசவாலைகளுக்கும் விசைத்தறிகளுக்கும் தொடர்ச்சியாக மின்சாரம் கிடைக்காததால், கோவைதிருப்பூர் பகுதிகளில் நெசவுத் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
பின்னலாடைத் தொழிலில் கூட மின்சாரத் தட்டுப்பாட்டை ஜெனரேட்டர்களை வைத்து இயக்கி சமாளித்துவிட முடியும். ஆனால், விசைத்தறியோ கடும் மனித உழைப்பைக் கொண்டு குறைந்த லாபத்தில் இயங்கும் தொழிலாகும். இத்தொழிலுக்கு தினமும் 5 மணி நேர மின்வெட்டு என்றால், அத்தொழில் எவ்வளவு பாதிக்கப்படும் என்று சொல்லத் தேவையில்லை. இப்பாதிப்புகள் அனைத்தும் தொழிலாளர் தலையில் சுமத்தப்பட்டு, அவர்களது ஊதியமும் கணிசமாகக் குறைந்துள்ளது.
கோவை, ஈரோடு மாவட்டங்கள், தமிழகத்தின் மின்சாரத்தில் 13.5%ஐ நுகரும் அளவுக்கு நெசவாலைகள், நூற்பாலைகளைக் கொண்டுள்ளன. இப்பகுதிகளில் பல சமயங்களில் 8 மணி நேரம் வரை மின்வெட்டு நீடிக்கிறது. இதனால் நெசவாலைகளும் நூற்பாலைகளும் கடுமையாகப் பாதிக்கப்பட்டு உற்பத்தி வீழ்ச்சியடைந்துள்ளது. ஏற்கெனவே அமெரிக்க டாலரின் மதிப்பு வீழ்ச்சியால் 15%க்கு மேல் இலாபத்தில் சரிவைக் கண்டுள்ள நெசவுத் தொழிலை மின் பற்றாக்குறையானது மேலும் நலிவடையச் செய்துவிடும் என்று தென்னிந்திய ஆலை அதிபர்கள் சங்கம் கூறுகிறது. இதுதவிர, தமிழகமெங்கும் பல்லாயிரக்கணக்கான சிறுதொழில் நிறுவனங்கள் தொடரும் மின்வெட்டால் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளன.
அரசு புள்ளி விவரங்களின்படி தமிழகத்தின் மொத்த மின்உற்பத்தி 10,000 மெகாவாட் ஆகும். இதில் 55% தமிழக அரசின் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 28% மத்திய அரசின் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 11% தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்தும் 3.5% வெளி மாநிலங்களிலிருந்தும் பெறப்படுகிறது.
இது தவிர, காற்றாலைகள் மூலம் ஏறத்தாழ 3000 மெகாவாட் மின்சாரம் கிடைக்கிறது. இருப்பினும், மின்வெட்டு தொடரக் காரணம் என்ன?
காற்றாலைகள் மற்றும் நீர்மின் திட்டங்களிலிருந்து அண்மைக் காலமாக மின் உற்பத்தி எதிர்பார்த்த அளவுக்குக் கிடைக்கவில்லை. இதுதான் மின்சாரத் தட்டுப்பாட்டுக்குக் காரணம் என்கிறார் அமைச்சர் வீராச்சாமி.
நல்லவேளை...வாயுபகவானுக்காகவும், வருணபகவானுக்காகவும் சிறப்பு வேள்வி செய்யுங்கள் என்று மின் துறை அமைச்சர் மக்களுக்கு யோசனை சொல்லவில்லை.
அணைகள் அனைத்தும் நிரம்பி வழியும் இந்நேரத்தில் மின்உற்பத்தி எப்படி முடங்கிப் போகும்?
மேலும், காற்றாலைகள் மூலம் கிடைக்கும் மின்சாரம் மிகக் குறைவானதுதான். ஆனால், தற்போதைய மின்தட்டுப்பாடோ 30%க்கு மேலாக இருக்கிறதே, அதற்குக் காரணம் என்ன?
கடந்த இருபது ஆண்டுகளாக மின்னுற்பத்தியிலும் மின் விநியோகத்திலும் புழங்கிவரும் எந்திரங்களோ, கருவிகளோ புதுப்பிக்கப்படவில்லை; சீரமைக்கப்படவில்லை. மின்தடையைப் பழுதுநீக்கி சரிசெய்யும் துறையிலும் பராமரிப்பிலும் பல்லாயிரக்கணக்கான காலி இடங்கள் நிரப்பப்படாமல், தற்காலிகத் தொழிலாளர்களை வைத்து சமாளித்து வருகின்றனர். சென்ற ஆட்சியில் கோரப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் இறுதியாக்கப்பட்டு முடிக்கப்படாததால் பல வேலைகள் கிடப்பில் உள்ளன. இத்தகைய நிர்வாகச் சீர்கேடுகளும் குளறுபடிகளுமே மின்தடைக்கு முக்கிய காரணங்களாகின்றன.
'அடுத்த மாநிலங்களிலிருந்து மின்சாரத்தை வாங்கி சமாளிப்பேன்' என்று சொல்லும் ஆற்காடு வீராச்சாமி இருக்கிற மின்உற்பத்தி நிலையங்கள் சிறப்பாக செயல்படாமல் சீரழிந்துவருவதைப் பற்றி சிந்திப்பதில்லை. ஆனால் அவருக்கோ எப்போதும் முதலமைச்சரின் நிழல்போல அவரை பின்தொடர்வதற்கே நேரம் போதவில்லை. தமிழகத்தில் மின்பற்றாக்குறை என்ற தலையாய பிரச்சனையில் தலையிடுவதற்கு அவருக்கு எங்கே நேரம் கிடைக்கிறது? அதற்குத்தான் அதிகாரிகள் இருக்கிறார்களே அவர்கள் பார்த்துக் கொள்வார்கள். அது அவர்களின் பாடு... என்பதே அமைச்சரின் அணுகுமுறையாக உள்ளது.
ஆனால் அதிகாரிகள், இருக்கும் வாய்ப்புகளுக்குள் இருந்துதான் இயங்க முடியும். அவர்களால் கொள்கை முடிவுகள் எடுக்க முடியாது. உதாரணமாக கடந்த 17 ஆண்டுகளில் மின் உற்பத்திக்காக ஒதுக்கப்படும் நிதியில் 40 சதவிகிதம் குறைக்கப்பட்டுள்ளது
எதற்காக இப்படி ஒரு நடவடிக்கை?
கூடுதலாக மின் உற்பத்திக்கு நிதி தேவைப்படும் காலகட்டத்தில் அதை குறைக்க வேண்டியதற்கான காரணத்தை விளக்க வேண்டிய பொறுப்பு ஜெயலலிதா, ஆற்காடு வீராச்சாமி இருவருக்குமே உள்ளது
.
இது மட்டுமல்ல, அரசாங்கம் முதலீடு செய்தபோது குறைந்த செலவில் பெறமுடிந்த மின்சாரத்தை தனியார் கைகளுக்கு தாரைவார்த்து அதை எட்ட முடியாத உயரத்திற்கு கொண்டு போனபோதிலும் இரு கழகங்களும் இறுமாப்பு கொள்ளலாம்.
தனியார் மின்உற்பத்தி செய்ய தாராள சலுகைகளை அள்ளித்தந்தது தமிழக அரசு, அவர்கள் உற்பத்தி செய்த மின்சாரத்தை அதிக விலை தந்து வாங்கிய வகையில் அடைந்ததோ அபார நஷ்டம்.
தனியார் மின் உற்பத்தியில் இறங்காத காலகட்டம்வரை நமது மின்வாரியம் ஒரு பற்றாக்குறையற்ற வாரியமாகவே பரிமளித்தது. ஆனால் தனியார் நிறுவனங்கள் தந்த நிர்பந்தங்களால் தமிழக மின்வாரியம் இன்று 3000 கோடி பற்றாக்குறையில் மூழ்கிவிட்டது. இத்தனை இழப்புகளுக்குப் பிறகு தமிழக மக்களின் மின்தேவையில் தனியார் நிறுவனங்கள் தந்த மின்சாரத்தின் மூலம் வெறும் 9 சதவிகிதத்தை மட்டுமே ஒப்பேற்ற முடிந்துள்ளது.
இந்தச் சூழலில் அமைச்சர், "வணிக ரீதியில் 25,000 மெகாவாட் மின்உற்பத்தி செய்ய தனியாருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மூன்று வருடத்தில் இந்த மின்சாரம் கிடைத்துவிடும் என அறிவித்துள்ளார். ஆனால் இது சாத்தியமே இல்லை, வெறும் சவடால்தான் என்கிறார்கள் இத்துறை நிபுணர்கள்.
இலவச டிவி பெட்டிகள் வழங்கியபிறகு 1,20,256 புதிய இலவச இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இலவச கலர் டெலிவிஷன்களுக்கு பலநூறுகோடி செலவழிக்க முடிந்த தமிழக அரசுக்கு பல்வேறு வகையிலும் அடிப்படை, அத்தியாவசிய தேவையாகிப்போன மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு முதலீடு செய்ய மனமில்லை என்பது கவலையளிப்பதாக உள்ளது.
"வட மாநிலங்களைவிட தமிழகத்தில் மின்வெட்டு குறைவுதான். மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரை தொழிற்சாலைகள் ஜெனரேட்டர்களை பயன்படுத்தவேண்டும்..." இப்படியெல்லாம் சொல்வது அவமானகரமானது என்பதைக்கூட உணராதவர்கள்தான் இன்று ஆட்சியிலும், அதிகாரத்திலும் உள்ளனர்.
உணவு, உடை, இருப்பிடத்திற்கு அடுத்த நிலையில் இருக்கும் அத்தியாவசிய தேவையான மின்சாரத்தில் அலட்சியம் காட்டுபவர்களை வாழும் தலைமுறைமாத்திரமல்ல, வருங்காலத் தலைமுறையும் மன்னிக்காது.
உத்தேசிக்கப்பட்ட பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தாமல் கிடப்பில் போட்டதும்கூட இந்தப் பற்றாக்குறைக்கு ஒரு காரணமாகச் சொல்லலாம்.
1. தூத்துக்குடியின் தமிழ்நாடு மின்சார வாரியமும் நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனமும் இணைந்து 1,000 மெகாவாட் உற்பத்தி செய்யும் மின் உற்பத்தி நிலையத்தை அமைக்க திட்டங்கள் இருந்தபொழுதும் அதை நிறைவேற்றக்கூடிய வகையில் விரைவான செயல்பாடுகள் இல்லை.
2. ஜெயங்கொண்டான் தமிழ்நாடு மின்வாரியம், நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் இணைந்து 500 மெகா வாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய திட்டமும் நிறைவேற்றப்படவில்லை.
3. குந்தாவில் 500 மெகாவாட் மின்உற்பத்தி செய்யக்கூடிய அளவில் திட்டங்கள் இருந்தபொழுதும் தமிழ்நாடு மின்சார வாரியம் அதைக் கவனிக்காமல் இருக்கிறது.
4. நெல்லை மாவட்டம் உடன்குடியில் 1,500 மெகா வாட் உற்பத்தி செய்யும் நிலையத்தை அமைக்க தமிழ்நாடு அரசு சுணக்கம் காட்டுகிறது.
5. வடசென்னை மின்உற்பத்தி நிலையத்தில் இருந்து மேலும் 600 மெகா வாட் உற்பத்தியை அதிகரிக்க திட்டங்கள் இருந்தும் அதற்கான செயல்பாடுகள் இல்லை.
6. இதேபோன்று மேட்டூரிலும் 500 மெகா வாட் மின் உற்பத்தி அதிகரிக்கக்கூடிய சூழல் இருந்தும் தமிழ்நாடு அரசு பாராமுகமாக இருக்கிறது.
7. கோயம்பேடில் அன்றாடம் கிடைக்கின்ற காய்கறிக் கழிவில் இருந்து மரபுசாரா எரிசக்தி மூலம் 550 மெகா வாட் கிடைக்கக்கூடிய அளவுக்கு மின்உற்பத்தி செய்யலாம் என்ற திட்டமும் நடைமுறைக்கு வரவில்லை.
8. தமிழகத்தில் உள்ள காற்றாலைகளுக்குத் தேவையான காற்று வீசவில்லை என்ற காரணத்தால் உரிய உற்பத்தி இல்லை என்று தமிழக அரசு குறிப்பிட்டாலும், இத்துறை தனியார் வசம் இருப்பதால் அதற்குத் தேவையான வசதிகளையும் கட்டுப்பாடுகளையும் அரசு செய்யாததால் காற்றாலைகள் மின்உற்பத்தி பின்தங்கியுள்ளன.
தொலைநோக்குப் பார்வை இல்லாமல் மின்துறை சீரழிவை நோக்கிச் செல்கிறது. அண்மையில் நம்முடைய முதல்வர் 'சில அமைச்சர்களின் செயல்பாட்டில் தனக்கு திருப்தியில்லை' என்று கூறியதுகூட மின் துறையையும், மணல் கொள்ளையையும் மனதில் வைத்துக்கூறியிருக்கலாம் என்றுகூட நமக்கு சந்தேகம் எழுகிறது.
கணக்கற்ற பன்னாட்டு நிறுவனங்களுடனும் பெருமுதலாளிகளுடனும் தமிழக அரசு போட்டுக் கொண்டிருக்கும் ஒப்பந்தங்கள் 24 மணி நேரத் தங்குத் தடையற்ற மின் வழங்கலை முன்னிபந்தனையாகக் கொண்டுள்ளன. புதிதாக உருவாகி வரும் 120 தொழில் பூங்காங்களால் மட்டும் 700 மெகாவாட்டுகள் வரை மின்தேவை கூடுதலாகியுள்ளது.
ஆனால், கூடுதல் மின்தேவையை ஈடு செய்யும் வகையில் மின் உற்பத்தி அதிகரிக்கப்படவில்லை. அதிக உற்பத்தியை ஈட்டி, அடுத்தடுத்து தங்கப்பதக்கம் வெல்லும் மேட்டூர் மின்நிலையத்திலும் ஊழியர் பற்றாக்குறை நிலவுவதிலிருந்தே அரசின் நிர்வாகச் சீர்கேட்டைப் புரிந்து கொள்ள முடியும்.
உள்ளூர் தொழிலுக்கும் விவசாயத்துக்குமான மின்சாரத்தை வெட்டி பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள தமிழக அரசு, அதேநேரத்தில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் தொழில் பூங்காக்கள், பன்னாட்டு நிறுவனங்கள், கணினி தொழில்நுட்ப நிறுவனங்கள் முதலானவற்றுக்குத் தடையின்றி மின்சாரத்தை வழங்கிக் கொண்டிருக்கிறது. இதன்மூலம், அரசின் மின் விநியோகத்தின் மீது அவநம்பிக்கை உருவாகவும், தனியார் மின்சார விநியோகத்தை மக்கள் இயல்பாக ஏற்றுக் கொள்ளச் செய்யவுமான எதிர்விளைவையே உருவாக்கி வருகிறது.
மின்வெட்டால் கடும் பாதிப்புக்குள்ளான தமிழகம், நிர்வாகக் குளறுபடிகளைச் சீரமைத்தால் நெருக்கடியிலிருந்து மீண்டு விட முடியும். ஆனால் தனியார்மயம், தாராளமயம், உலகமயம் எனும் கொள்கைகள் தமிழ்நாட்டு மக்களை மீளமுடியாத மரணக்குழியில் தள்ளிக்கொண்டிருக்கின்றன.
தமிழகத்தையும் நாட்டையும் தாராளமயமாக்கல் என்னும் கொள்ளைநோய் சூறையாடிக் கொண்டிருக்கிறது. எதிர்க்கட்சிகள் மின்வெட்டினால் ஏற்பட்டுள்ள பாதிப்பை வைத்து போராட்டங்களை நடத்தி மக்கள் பிரச்சினைகளுக்குப் போராடுவதைப் போல நாடகமாடிக்கொண்டிருக்கின்றன.
மையமான விவகாரத்தை விட்டுப் பக்கவாட்டில் ஒதுங்கிக் கொண்டு போராட்டம் நடத்தும் இந்த ஓட்டுக் கட்சிகள், தலைக்கே பேராபத்து வந்துள்ளபோது தலைவலிக்கு மருந்து கேட்கின்றன.
உதிரப் போக்கிலிருந்து உயிர் காக்கும் மருந்து
வேர்செல்களை உபயோகித்து உடலில் திசுக்களைப்புதுப்பிக்கும் சிகிச்சைமுறை உலகமுழுவதும் பிரபலமாகிக்கொண்டிருக்கிறது. வளரும் கருவிலிருந்து வேர்செல்களை எடுத்து பயன்படுத்துவதில் சிசுக்கொலை என்ற தர்மசங்கடமான சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கு ஆபத்தில்லாத மாற்றுவழி குழந்தை பிரசவித்தவுடன் தூக்கி வீசப்படும் நஞ்சுக்கொடியிலிருந்து வேர்செல்களைப் பிரித்தெடுப்பதே.
ஆனால் அதை சர்வசாதாரணமாக பெண்களின் மாதாந்திர உதிரப்போக்கிலிருந்து கூட வேர்ச்செல்களைப்பெறமுடியும்.
இரத்தத்தில் காணப்படும் வேர் செல்களை ஸ்ட்ரோமல்-ஸ்டெம் செல் என்பார்கள். கருவிலிருந்து பெற்ற வேர்செல்களிலிருந்து சகலவிதமான திசுக்களையும் அடையலாம்.
இயலாவிட்டாலும் அடிபோஜெனிக், காண்ட்ரோஜெனிக், ஆஸ்டியோஜெனிக், அதாவது கொழுப்புத்திசு, இணைப்புத்திசு, எலும்புத்திசு, உட்தோல் திசுக்களில் இதயத்திசு மற்றும் நரம்பு செல்களை அதிலிருந்து பெறமுடியும் என்று கண்டுபிடித்திருக்கிறார்கள்.
இனி செய்யப்போகும் வேர்செல் சிகிச்சைகளுக்கு பெண்ணின் மாதவிலக்கு இரத்தம் பயன்படும்.
எதை தீட்டென்றும் அசூசை என்றும் சொல்லி வந்தார்களோ அதுவே உயிர்காக்கும் மருந்தாகிறது இன்று.
நம்மவரின் நிலைமை
அரசே நலம். நலமறிய ஆவல்.
ரொம்பநாளாக எழுத ஆசைப்பட்ட விஷயம் ஒன்று இருக்கிறது. கொஞ்சம் நாற்றம்பிடிச்ச விஷயம். படிக்கும்போது மூக்கை வேண்டுமானால் மூடிக்கொள்ளுங்கள். மனதை மட்டும் திறந்துகொள்ளுங்கள்.
எவ்வளவோ நவீன கருவிகள் வந்துவிட்டன. இன்னமும் மனிதன் சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பை நீக்கவேண்டியிருக்கிறது அரசே!
தினமும் சாக்கடைக்குள் தலைமுழுகி மலத்தைவாயில் ஏந்தும் துப்புரவுத் தொழிலாளிகளை நினைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது அரசே!
நம்முடைய குடல் நாறிப்போகாமல் கக்கூசுக்குள் தள்ளுவது நம்பாடு! அதற்கப்புறம் அந்தக்கருமத்தை பாதாள சாக்கடைக்குள் தள்ளிவிடுவது துப்புரவுத்தொழிலாளியின் பாடு!
எல்லாத்துறைகளிலும் ஆராய்ச்சிக்காகவும் வளர்ச்சிக்காகவும் ஒரு பிரிவு இருக்கும். சாக்கடைக்குள் மலத்தைத் தள்ளும் துறையில் மட்டும் ஆய்வும் ஆராய்ச்சியும் ஏன் செய்வதில்லை? செய்வதற்கு விஷயம் இல்லையா? புதிய கருவிகள் ஏதும் இல்லையா? நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் மேடைக்குமேடை நீங்கள் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்த ஜெர்மனியிலும், ஜப்பானிலும், சிங்கப்பூரிலும் மனிதர்கள்தான் மனிதமலத்தை சாக்கடைக்குள் தள்ளிவிடுகிறார்களா அரசே!
அய்யன் திருவள்ளுவர் ஓலைச்சுவடியில் எழுதினார் என்பதற்காக நாமும் ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் வைத்துக்கொண்டு அலைவதில்லை.
சாக்கடை அள்ளுவதில் மட்டும் இன்னும் நவீனத்துவம் வரவில்லை. அப்புறம் எப்போது பின் நவீனத்துவம் வரப்போகிறது?
அடைபட்ட சாக்கடைக்குள் மூழ்கி இறந்துபோன தொழிலாளர்களில் பெரும்பாலோரின் வயது 19ல் இருந்து 35 வயதுக்குள் என்கிற புள்ளிவிவரம் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது அரசே!
"காலைல 5.30 மணிக்கு எழுந்து குளிச்சிட்டு , என் 22 நாள் கொழந்தய கொஞ்சிட்டுப் போன எங்கப்பா திரும்பி பொணமா தான் வந்தாரு" என்கிறார், சாக்கடையில் அடைப்பு எடுக்க இறங்கி மூச்சுத் திணறி செத்துப்போன பிரபுவின் மகள் ஜோதி.
ஜோதியின் வாக்குமூலத்தில் நீங்கள் ஒரு திரைக்கதை எழுதவதற்கு தேவையான கரு இருப்பது எழுத்தாளர்களாகிய எங்களுக்கும் தெரியும். எங்களின் முன்னோடியான உங்களுக்கும் தெரியும்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள கடலாடி கிராமத்தில் இருந்து சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புத் தேடி சென்னை வந்தவர் பிரபு. சாதி பலமும், பண பலமும் இல்லாத அவருக்கு சாக்கடை மூழ்கும் தொழிலே வாழ்வு கொடுத்தது. ஒரு நாள் வழக்கம் போல சாக்கடை அடைப்பு எடுக்கும் வேலைக்குச் சென்றார். அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் ஏற்பட்ட அடைப்பை நீக்க சாக்கடைக்குள் இறங்கினார். சாக்கடையின் வாய் சிறியதாக இருந்ததால் வாயு நெடி தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சாக்கடைக்குள்ளேயே துடித்தார். இதனை பார்த்துப் பதறிப்போன அவரின் 19 வயது மகன் சாக்கடைக்குள் குதித்தார். இந்த சமூகம் தூய்மையாக வாழ வேண்டும் என்பதற்காக உழைத்த இவர்கள் இருவரும் சாக்கடையில் உயிர் துறந்தனர்.
இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு தேர்தல் நேர வசனங்களும், சுவரொட்டிகளும் எவ்வளவோ உருவாக்கலாம். அந்த சாமர்த்தியமுள்ள எதிர்க்கட்சிதான் இப்போது நாட்டில் இல்லை.
நீங்கள் உருவாக்காத கோஷங்களா, அரசே?
"கூலி உயர்வு கேட்டான் அத்தான்...குண்டடிபட்டு செத்தான்."
"குடல் எரியுது; கும்பி கருகுது; குளு குளு ஊட்டி ஒரு கேடா?"
"ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?"
"உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு."
இவையெல்லாம் அந்தக்கால தேர்தல் வசனங்கள். சுவர்களில் எழுதப்பட்டவை; சாலைகளில் கூவப்பட்டவை; எங்களால் விரும்பப்பட்டவை; மாற்றத்தை ஏற்படுத்தியவை.
தமிழ்நாட்டில் மனித உயிர்கள் மலிவானவை என்ற அவச்சொல் வேண்டாம் அரசே!
ஜோதியின் குடும்பத்திலும், பிரபுவின் குடும்பத்திலும் கூட புத்திரபாசமும் தந்தைப்பாசமும் இருக்கும் என்பது உண்மைதானே!
அடுத்தமுறை கக்கூசுக்குள் நாம் இருக்கும்போது இந்த ஏழைகளைபற்றிய நினைவு நமக்குள் இருக்கவேண்டும் அரசே!
ரொம்பநாளாக எழுத ஆசைப்பட்ட விஷயம் ஒன்று இருக்கிறது. கொஞ்சம் நாற்றம்பிடிச்ச விஷயம். படிக்கும்போது மூக்கை வேண்டுமானால் மூடிக்கொள்ளுங்கள். மனதை மட்டும் திறந்துகொள்ளுங்கள்.
எவ்வளவோ நவீன கருவிகள் வந்துவிட்டன. இன்னமும் மனிதன் சாக்கடைக்குள் மூழ்கி அடைப்பை நீக்கவேண்டியிருக்கிறது அரசே!
தினமும் சாக்கடைக்குள் தலைமுழுகி மலத்தைவாயில் ஏந்தும் துப்புரவுத் தொழிலாளிகளை நினைக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது அரசே!
நம்முடைய குடல் நாறிப்போகாமல் கக்கூசுக்குள் தள்ளுவது நம்பாடு! அதற்கப்புறம் அந்தக்கருமத்தை பாதாள சாக்கடைக்குள் தள்ளிவிடுவது துப்புரவுத்தொழிலாளியின் பாடு!
எல்லாத்துறைகளிலும் ஆராய்ச்சிக்காகவும் வளர்ச்சிக்காகவும் ஒரு பிரிவு இருக்கும். சாக்கடைக்குள் மலத்தைத் தள்ளும் துறையில் மட்டும் ஆய்வும் ஆராய்ச்சியும் ஏன் செய்வதில்லை? செய்வதற்கு விஷயம் இல்லையா? புதிய கருவிகள் ஏதும் இல்லையா? நாற்பது ஆண்டுகளுக்கு முன்னால் மேடைக்குமேடை நீங்கள் சுட்டிக்காட்டிக்கொண்டிருந்த ஜெர்மனியிலும், ஜப்பானிலும், சிங்கப்பூரிலும் மனிதர்கள்தான் மனிதமலத்தை சாக்கடைக்குள் தள்ளிவிடுகிறார்களா அரசே!
அய்யன் திருவள்ளுவர் ஓலைச்சுவடியில் எழுதினார் என்பதற்காக நாமும் ஓலைச்சுவடியும் எழுத்தாணியும் வைத்துக்கொண்டு அலைவதில்லை.
சாக்கடை அள்ளுவதில் மட்டும் இன்னும் நவீனத்துவம் வரவில்லை. அப்புறம் எப்போது பின் நவீனத்துவம் வரப்போகிறது?
அடைபட்ட சாக்கடைக்குள் மூழ்கி இறந்துபோன தொழிலாளர்களில் பெரும்பாலோரின் வயது 19ல் இருந்து 35 வயதுக்குள் என்கிற புள்ளிவிவரம் கொஞ்சம் நெருடலாக இருக்கிறது அரசே!
"காலைல 5.30 மணிக்கு எழுந்து குளிச்சிட்டு , என் 22 நாள் கொழந்தய கொஞ்சிட்டுப் போன எங்கப்பா திரும்பி பொணமா தான் வந்தாரு" என்கிறார், சாக்கடையில் அடைப்பு எடுக்க இறங்கி மூச்சுத் திணறி செத்துப்போன பிரபுவின் மகள் ஜோதி.
ஜோதியின் வாக்குமூலத்தில் நீங்கள் ஒரு திரைக்கதை எழுதவதற்கு தேவையான கரு இருப்பது எழுத்தாளர்களாகிய எங்களுக்கும் தெரியும். எங்களின் முன்னோடியான உங்களுக்கும் தெரியும்.
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகில் உள்ள கடலாடி கிராமத்தில் இருந்து சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு பிழைப்புத் தேடி சென்னை வந்தவர் பிரபு. சாதி பலமும், பண பலமும் இல்லாத அவருக்கு சாக்கடை மூழ்கும் தொழிலே வாழ்வு கொடுத்தது. ஒரு நாள் வழக்கம் போல சாக்கடை அடைப்பு எடுக்கும் வேலைக்குச் சென்றார். அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில் ஏற்பட்ட அடைப்பை நீக்க சாக்கடைக்குள் இறங்கினார். சாக்கடையின் வாய் சிறியதாக இருந்ததால் வாயு நெடி தாக்கி மூச்சுத் திணறல் ஏற்பட்டு சாக்கடைக்குள்ளேயே துடித்தார். இதனை பார்த்துப் பதறிப்போன அவரின் 19 வயது மகன் சாக்கடைக்குள் குதித்தார். இந்த சமூகம் தூய்மையாக வாழ வேண்டும் என்பதற்காக உழைத்த இவர்கள் இருவரும் சாக்கடையில் உயிர் துறந்தனர்.
இந்த சம்பவத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு தேர்தல் நேர வசனங்களும், சுவரொட்டிகளும் எவ்வளவோ உருவாக்கலாம். அந்த சாமர்த்தியமுள்ள எதிர்க்கட்சிதான் இப்போது நாட்டில் இல்லை.
நீங்கள் உருவாக்காத கோஷங்களா, அரசே?
"கூலி உயர்வு கேட்டான் அத்தான்...குண்டடிபட்டு செத்தான்."
"குடல் எரியுது; கும்பி கருகுது; குளு குளு ஊட்டி ஒரு கேடா?"
"ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?"
"உடல் மண்ணுக்கு; உயிர் தமிழுக்கு."
இவையெல்லாம் அந்தக்கால தேர்தல் வசனங்கள். சுவர்களில் எழுதப்பட்டவை; சாலைகளில் கூவப்பட்டவை; எங்களால் விரும்பப்பட்டவை; மாற்றத்தை ஏற்படுத்தியவை.
தமிழ்நாட்டில் மனித உயிர்கள் மலிவானவை என்ற அவச்சொல் வேண்டாம் அரசே!
ஜோதியின் குடும்பத்திலும், பிரபுவின் குடும்பத்திலும் கூட புத்திரபாசமும் தந்தைப்பாசமும் இருக்கும் என்பது உண்மைதானே!
அடுத்தமுறை கக்கூசுக்குள் நாம் இருக்கும்போது இந்த ஏழைகளைபற்றிய நினைவு நமக்குள் இருக்கவேண்டும் அரசே!
குதிரை மேல் ஏறிய ஜனநாயகம்
செங்கோட்டையில் குதிரை வியாபாரத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்ட வியாபாரிகள் சென்னைக் கோட்டையில் ஆர்ப்பரித்திருக்கிறார்கள். நீங்கள் கவலைப்பட ஒன்றுமில்லை. இது கோட்டைக்கு வெளியில் நடக்கிற வெட்டுக்குத்து. இந்த பலூன் மிரட்டலுக்கெல்லாம் நீங்கள் பயப்படமாட்டீர்கள் என்பது எனக்குத்தெரியும். வேண்டிய ஊசிமருந்து டெல்லி அன்னையிடம் இருக்கிறது என்பதும் உங்களுடைய கண் ஜாடையில் அது குத்தியேற்றப்படும் என்பதும் எனக்குத்தெரியும்.
சிவப்பு நாடாவிற்குள் ஃபைல்கள் மூச்சு முட்டிக்கொண்டிருப்பது உங்களுக்கு பிடிக்காது என்று படித்ததும் எனக்கு புல்லரித்துப்போனது.
உங்களுக்குப்பிடிக்காத ஒன்று சில அரசு ஊழியர்களுக்கு பிடித்திருக்கிறதே? அது ஏன்? அதையும் கொஞ்சம் கண்திறந்து பாருங்கள் அரசே!
நீங்கள் சிரமத்தில் இருப்பது எனக்குத்தெரியும்.
நான் நலமாக இருக்கிறேனா என்று நீங்கள் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை என்பதில் எனக்கு வருத்தமில்லை.
நான் நலமாக இருப்பதால் தான் தங்களுக்கு வரி, வாய்தா எல்லாம் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் தாராளமாக அள்ளிக் கொடுக்கிறீர்கள்.
சின்னத்திரைக்கு ரூபாய் கொட்டிக்கொடுத்திருக்கிறீர்கள்.
நீங்கள் ரூபாயைக் கொட்டி ஆதரவை அள்ளுகிறீர்கள்.
அவர்கள் அழுகையைக்கொட்டி ரூபாயை அள்ளுகிறார்கள்.
நாங்கள் வரியைக்கொட்டி அழுகையை அள்ளுகிறோம்.
எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. சின்னத்திரைக்கு விருது கொடுத்தமாதிரி, தமிழ்நாட்டில் அதிகமான விற்பனையைக்காட்டும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு விருது கொடுத்தால் என்ன?
வருமானமும் கூடும். அழுகையும் கூடும்.
சின்னத்திரை அழுகையைக்காட்டிலும் இந்த அழுகை ரொம்பவும் "ரியல்" ஆக இருக்கும்
சிவப்பு நாடாவிற்குள் ஃபைல்கள் மூச்சு முட்டிக்கொண்டிருப்பது உங்களுக்கு பிடிக்காது என்று படித்ததும் எனக்கு புல்லரித்துப்போனது.
உங்களுக்குப்பிடிக்காத ஒன்று சில அரசு ஊழியர்களுக்கு பிடித்திருக்கிறதே? அது ஏன்? அதையும் கொஞ்சம் கண்திறந்து பாருங்கள் அரசே!
நீங்கள் சிரமத்தில் இருப்பது எனக்குத்தெரியும்.
நான் நலமாக இருக்கிறேனா என்று நீங்கள் ஒரு வார்த்தைகூட கேட்கவில்லை என்பதில் எனக்கு வருத்தமில்லை.
நான் நலமாக இருப்பதால் தான் தங்களுக்கு வரி, வாய்தா எல்லாம் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறேன். நீங்களும் தாராளமாக அள்ளிக் கொடுக்கிறீர்கள்.
சின்னத்திரைக்கு ரூபாய் கொட்டிக்கொடுத்திருக்கிறீர்கள்.
நீங்கள் ரூபாயைக் கொட்டி ஆதரவை அள்ளுகிறீர்கள்.
அவர்கள் அழுகையைக்கொட்டி ரூபாயை அள்ளுகிறார்கள்.
நாங்கள் வரியைக்கொட்டி அழுகையை அள்ளுகிறோம்.
எனக்கு ஒரு யோசனை தோன்றுகிறது. சின்னத்திரைக்கு விருது கொடுத்தமாதிரி, தமிழ்நாட்டில் அதிகமான விற்பனையைக்காட்டும் டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு விருது கொடுத்தால் என்ன?
வருமானமும் கூடும். அழுகையும் கூடும்.
சின்னத்திரை அழுகையைக்காட்டிலும் இந்த அழுகை ரொம்பவும் "ரியல்" ஆக இருக்கும்
ஊழல் பாலத்திற்கு ஒரு "செக்"
ஒரு புதிய கண்டுபிடிப்பு எப்போது நிகழ்த்தப்படுகிறது தெரியுமா?
இது என்ன கேள்வி? அவசியம் ஏற்படும்போது மட்டுமே புதுப்புது கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது வரலாறு.
கடந்த ஆகஸ்டு மாதம் மின்னபோலிஸ் நகரில் ஒரு பாலம் இடிந்து 13 பேர் உயிரிழந்தனர். பாலத்தின் உறுதித்தன்மையை விரைவாக கண்டறிய வேண்டிய அவசியம் பொறியாளர்களுக்கு ஏற்பட்டது. மிச்சிகன் பல்கலைக்கழக பொறியாளர் ஜெரோம் லின்ச் என்பவர் பாலத்தின் மீது ஒரு வண்ணப்பூச்சை தெளித்து அதன்மூலம் பாலத்தின் உறுதித்தன்மையை அறிந்துகொள்ளும் வழியைக் கண்டுபிடித்தார்.
இந்த முறையின் மூலம் பாலத்தின் எந்தப்பகுதியையும் உடைத்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. இலட்சக்கணக்கான வாகனங்கள் கடந்துசெல்லும் பாலங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கின்றன என்பதை உடனுக்குடன் அறிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு மிகவும் உதவியாக இருக்குமில்லையா?
அரிமானத்தின் காரணமாக பாலங்கள் வயதாகி வலிமை இழந்துபோவது இயற்கையான நிகழ்வு.
பொறியாளர்கள் என்னதான் கண்களில் விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு சோதனை செய்துபார்த்தாலும் பாலத்தில் ஏற்பட்டுள்ள மிகச்சிறிய சேதாரங்கள் மனிதக்கண்களை ஏமாற்றிவிடுகின்றன.
பாலத்தின் மேற்புறம் ஒரு படலமாக இந்த சிறப்புக்கலவை தெளிக்கப்படுகிறது. படலத்தின் அடியில் நுண்ணிய கார்பன் நானோ குழாய்கள் பரப்பப்பட்டிருக்குமாம். கார்பன் மின்கடத்தும் பொருள். மின்னோட்டம் செலுத்தப்படும்போது, பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஒரு கம்ப்யூட்டர் காட்சித்திரையில் விரியச்செய்யுமாம். பாலத்தில் ஏற்பட்டிருக்கும் விரிசல் மேற்பரப்பிலும் காணப்படும் என்பதும், பாலத்தில் உள்ளே ஏற்பட்டிருக்கும் அரிமானம் மேற்பரப்பிலும் உண்டாகியிருக்கும் என்பதுதான் இந்த ஆய்வு முறையின் தத்துவம்.
பாலத்தின் உறுதித்தன்மையை உடனுக்குடன் தெரிந்துகொண்டால், விசாரணையை விரைவாக முடிக்கலாம்.
"பாலம் கட்டுவதில் ஊழல் செய்தவர்களை விரைவுநீதிமன்றம் மூலம் தண்டித்து விரைவாக சிறைக்கனுப்பி விடலாம்" என்ற நம்ம ஊர் குரல் கேட்கிறது.
கூடவே, "தடையாணைகள் இருக்கிறதும் எனக்குத்தெரியும்" என்ற குரலும் கேட்கிறது.
இது என்ன கேள்வி? அவசியம் ஏற்படும்போது மட்டுமே புதுப்புது கண்டுபிடிப்புகள் நிகழ்த்தப்பட்டுள்ளன என்பது வரலாறு.
கடந்த ஆகஸ்டு மாதம் மின்னபோலிஸ் நகரில் ஒரு பாலம் இடிந்து 13 பேர் உயிரிழந்தனர். பாலத்தின் உறுதித்தன்மையை விரைவாக கண்டறிய வேண்டிய அவசியம் பொறியாளர்களுக்கு ஏற்பட்டது. மிச்சிகன் பல்கலைக்கழக பொறியாளர் ஜெரோம் லின்ச் என்பவர் பாலத்தின் மீது ஒரு வண்ணப்பூச்சை தெளித்து அதன்மூலம் பாலத்தின் உறுதித்தன்மையை அறிந்துகொள்ளும் வழியைக் கண்டுபிடித்தார்.
இந்த முறையின் மூலம் பாலத்தின் எந்தப்பகுதியையும் உடைத்தெடுக்க வேண்டிய அவசியமில்லை. இலட்சக்கணக்கான வாகனங்கள் கடந்துசெல்லும் பாலங்கள் எவ்வளவு உறுதியாக இருக்கின்றன என்பதை உடனுக்குடன் அறிந்துகொள்ள இந்த கண்டுபிடிப்பு மிகவும் உதவியாக இருக்குமில்லையா?
அரிமானத்தின் காரணமாக பாலங்கள் வயதாகி வலிமை இழந்துபோவது இயற்கையான நிகழ்வு.
பொறியாளர்கள் என்னதான் கண்களில் விளக்கெண்ணெயை விட்டுக்கொண்டு சோதனை செய்துபார்த்தாலும் பாலத்தில் ஏற்பட்டுள்ள மிகச்சிறிய சேதாரங்கள் மனிதக்கண்களை ஏமாற்றிவிடுகின்றன.
பாலத்தின் மேற்புறம் ஒரு படலமாக இந்த சிறப்புக்கலவை தெளிக்கப்படுகிறது. படலத்தின் அடியில் நுண்ணிய கார்பன் நானோ குழாய்கள் பரப்பப்பட்டிருக்குமாம். கார்பன் மின்கடத்தும் பொருள். மின்னோட்டம் செலுத்தப்படும்போது, பாலத்தில் ஏற்பட்டுள்ள சேதங்களை ஒரு கம்ப்யூட்டர் காட்சித்திரையில் விரியச்செய்யுமாம். பாலத்தில் ஏற்பட்டிருக்கும் விரிசல் மேற்பரப்பிலும் காணப்படும் என்பதும், பாலத்தில் உள்ளே ஏற்பட்டிருக்கும் அரிமானம் மேற்பரப்பிலும் உண்டாகியிருக்கும் என்பதுதான் இந்த ஆய்வு முறையின் தத்துவம்.
பாலத்தின் உறுதித்தன்மையை உடனுக்குடன் தெரிந்துகொண்டால், விசாரணையை விரைவாக முடிக்கலாம்.
"பாலம் கட்டுவதில் ஊழல் செய்தவர்களை விரைவுநீதிமன்றம் மூலம் தண்டித்து விரைவாக சிறைக்கனுப்பி விடலாம்" என்ற நம்ம ஊர் குரல் கேட்கிறது.
கூடவே, "தடையாணைகள் இருக்கிறதும் எனக்குத்தெரியும்" என்ற குரலும் கேட்கிறது.
பெற்றுப் பிழைத்து வரும் பெண் சாதி
வளையல்காப்பு போட்டவுடன் பிறந்தவீட்டுக்குப்போகும் கர்ப்பிணிப்பெண்களுக்காக பெரியவர்களின் அனிச்சையான வேண்டுதல்:
"இவள் நல்லபடியாக பெற்றுப்பிழைத்துவரணும் ஆண்டவனே!"
கர்ப்பிணிப் பெண்களுக்கெல்லாம் பொதுவான வேண்டுதல்தான் இது.
ஆனால் இந்தியப்பெண்களுக்கு அவசியமானது.
இல்லையென்றால் ஐக்கியநாடுகளின் சிறப்பு அறிக்கையில் இந்தியாவின் பேறுகால மரணங்களைக்குறித்து கவலை தெரிவிக்கப் பட்டிருக்கவேண்டியதில்லை அல்லவா?
உலகத்தில் நடைபெறும் பேறுகால மரணங்களில் இருபது சதவீத மரணங்கள் இந்தியாவில் நடைபெறுகிறதாம்.
அதாவது ஒவ்வொரு ஐந்து நிமிடத்திற்கும் ஒரு தாய் பிரசவ அறையில் மரணத்தை சந்திக்கிறாள்.
இத்தனைக்கும் இந்திய அரசாங்கம் சுகாதாரத்துறைக்கு செய்துள்ள நிதி ஒதுக்கீடு முன்பு 0.9 சதவீதமாக இருந்தது. தற்போது 3.0 சதவீதமாக உள்ளது.
அதிர்ச்சியடைய வைக்கும் தகவல் எது தெரியுமா?
நிதியை முழுமையாக பயன்படுத்துவதில் இருக்கும் தடைக்கற்களாம்.
அது என்ன தடைக்கற்களோ? ஆண்டவனுக்குத்தான் வெளிச்சம்.
அரசுநிர்வாகத்தில் உள்ள இரண்டாயிரம் சமுதாய நலக்கூடங்களுக்கு 6,000 பயிற்சிபெற்ற ஊழியர்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் வெறும் 700 பயிற்சிபெற்ற மருத்துவர்களே இருக்கிறார்கள். ஆனால் தனியார் துறையில் 20,000 பயிற்சிபெற்ற மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள்.
ஏழை எளிய மக்களுக்கு சேவைசெய்வதில் தனியார் துறையில் பணிபுரியும் மருத்துவர்களுக்கு சமூகப் பொறுப்பும் அக்கறையும் வேண்டும் என்று சுட்டிக்காட்டுகிறது ஐக்கிய நாடுகள் சபையின் அறிக்கை.
மருத்துவராகி ஏழை எளிய மக்களுக்கு சேவை செய்யப்போவதாக பத்திரிக்கைகளுக்கு பேட்டியளிக்கும் மாணவ மாணவிகள் ஏன்தான் மனம்மாறிப் போனார்களோ?
கர்ப்பிணிப்பெண்களிடம் அதிகமாக காணப்படும் அனீமியா எனப்படும் இரும்புச்சத்து குறைபாடு தான் பேறுகால மரணங்களுக்கு ஒரு முக்கியமான காரணமாக இருக்கிறது. பொருளாதாரத்தில் முன்னேறிய குடும்பப்பெண்கள், படித்த பெண்மணிகள், நகர்ப்புறங்களில் இருப்பவர்கள் இவர்களிடம்கூட இந்த இரும்புச்சத்து குறைபாடு நோய் காணப்படுகிறது என்பதுதான் அதிசயம்.
பெண்கள் இதுகுறித்து போதிய அக்கறை காட்டுவதில்லை. பள்ளிக்கூட பருவத்திலேயே பெண்பிள்ளைகள் இந்த நோய்க்கு ஆளாகிப்போனதுதான் சோகம். கருத்தரித்த பெண்களில் முக்கால்வாசிப்பேர் அனீமியா நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
உலகம் முழுவதும் ஏறத்தாழ ஐந்து லட்சம் பேறுகால மரணங்கள் ஏற்படுகின்றன. இந்தியாவில் மட்டும் ஒரு லட்சத்து இருபதாயிரம் பேறுகால மரணங்கள் ஏற்படுகின்றன. இவற்றில் அனீமியா நோயால் ஏற்படும் மரணங்கள் மட்டும் எண்பது சதவீதம். இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவு 5 கிராம் / டெசி லிட்டருக்குக் குறையும்போது ஆபத்து ஏற்பட வாய்ப்பு அதிகம்.
பேறுகால மரணங்களைப்பற்றிய சரியான புள்ளிவிவரங்கள் தரப்படுவதில்லை என்பது ஒரு அதிர்ச்சி அளிக்கும் உண்மை.
பேறுகால மரணங்களுக்கு அனீமியா அல்லாத வேறு காரணங்களும் உள்ளன. முடிவெடுப்பதில் தாமதம், மருத்துவ வசதிக்காக பிரயாணம் செய்யவேண்டியிருத்தல், போக்கு வரத்து வசதியின்மை காரணமாகவும் இந்த மரணங்கள் ஏற்படுகின்றன.
போக்குவரத்து வசதியில்லாத கிராமங்களில், ஏழைக்குடும்பங்களில், பிரசவ நேரத்தில் சிக்கல் ஏற்படுமானால் அவர்கள் மவுண்ட்ரோட்டில் மாட்டிக்கொண்ட அணில் குஞ்சு மாதிரி தவித்துத்தானே போவார்கள்!
மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்துக்கு முன்னாள் குடியரசுத்தலைவர் அப்துல் கலாம் பாராட்டு தெரிவித்திருக்கிறார்.
கலாமிடம் பாராட்டு பெறுவது சாதாரணமல்ல. அவருடைய ஆசையையும் அதே நேரத்தில் வெளிப்படுத்தியிருக்கிறார். அது அன்புமணிக்கான செய்தியாகத்தான் கருத வேண்டும்.
புகையிலை தடை சட்டம், மது ஒழிப்பில் ஆர்வம் போன்ற செயல்பாடுகளால் அமைச்சர் அன்புமணி பாராட்டுக்கு உரியவராகியிருக்கிறார்.
பேறுகால மரணங்களை தடுப்பதில் அன்புமணி முழுமையான ஆர்வம் காட்டினால் அவருடைய புகழ் தொப்பியில் இன்னுமொரு வண்ண இறகு நிச்சயம் சேர்ந்துகொள்ளும்.
நாட்டின் எந்தெந்தப்பகுதிகளில் பேறுகால மரணங்கள் அதிகமாக ஏற்படுகிறது என்பதை கண்காணித்து, மரணத்தை உடனடியாக பதிவுசெய்யுமாறு உத்தரவிடவேண்டும்.
பேறுகால மரணம் சம்பவித்த குடும்பங்களில் நேர்காணல் நடத்தி உடல்நல மற்றும் சமூக காரணங்களை கண்டறிய வேண்டும்.
கிடைத்த விவரங்களை அலசி ஆராய்ந்து தீர்வு காணவேண்டும். கிடைத்த முடிவுகளை மீண்டும் சமூகக்குழுக்களுடன் பகிர்ந்துகொள்ளவேண்டும்.
அதிகாரிகள் அனைத்து நடைமுறைகளையும் கண்காணிக்க வேண்டும்.
குழந்தையைப் பெற்றெடுப்பது என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் மிகவும் சிக்கலான ஒரு கடமை.
வேதனையும், வெறுப்பும், சலிப்பும், இன்பமும், துன்பமும் கலந்த ஒரு அரிய அனுபவம் இது.
பத்து மாதத் தவத்தின் நிறைவாக அருமையான முத்துப் பிள்ளையைப் பெற்றெடுத்து தாய்மை என்ற தகுதியை சமுதாயத்தில் பெறுகிறாள் பெண்.
ஆனால் பிரசவ நேரத்தில் அவளுக்கு ஏற்படுகின்ற கஷ்டங்களைப் பார்க்கும் போது இனி குழந்தையே பெறக்கூடாது என்று அவளும் அவளைப் பார்க்கின்ற இதர இளம் பெண்களும் நினைக்கின்றனர்.
"பிறக்குபோதே அம்மாவை விழுங்கிய துக்கிரி" என்கிற அபாண்டமான பழிச்சொல் நம்மில் சிலருக்கு இருக்கலாம்.
அப்படியொரு பழிச்சொல் எந்த மனிதருக்குமே ஏற்படாதவாறு நாம் ஒவ்வொருவரும் நம்மால் ஆனதைச் செய்வோம்.
வெடிகுண்டுகளை கண்டு புடிக்க புதிய கருவி
இப்போதெல்லாம் வெடிகுண்டுகள் செய்வதென்பது குடிசைத்தொழிலாக போய்விட்டிருக்கிறது.
வெடிகுண்டுகளை நாய்கள் முகர்ந்து பார்த்து கண்டுபிடித்தது பழங்கதையாகப்போகப்போகிறது.
மிகச்சிறிய நாணயத்தின் அளவிலானது இந்த புதிய கருவி.
ஒரு "சில்"லில் இரண்டு உலோக படலங்கள்.
உலோக படலங்களுக்கிடையே வெடிகுண்டு செய்ய பயன்படும் ஹைட்ரஜன் பெராக்சைடின் வாசனை இருந்தால் போதும். இந்த எலக்ரானிக் மூக்கு வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.
செம்பு மற்றும் கோபால்ட் தாலோசையனைன் படலங்களுக்கிடையே எந்த வாயு இருந்தாலும் இரண்டு படலங்களும் ஒரே அளவிலான மின்சாரத்தை கடத்தும். ஆனால் வாயுக்களில் ஹைட்ரஜன் பெராக்சைடைச்சேருங்கள்...செம்பு படலத்தில் மின்னோட்ட அளவு அதிகரிக்கும் அதே நேரத்தில் கோபால்ட் படலத்தில் மின்னோட்டத்தின் அளவு குறைகிறது.
இரண்டு படலங்களிடையே மின்னோட்ட வேறுபாடு இருக்குமானால் அங்கே வெடிகுண்டு இருக்கிறது என்று பொருள். எப்படி இருக்கிறது இந்த கண்டுபிடிப்பு? காலத்திற்கேற்ற கண்டுபிடிப்பு!
ஹைட்ரஜன் பெராக்சைடை அடிப்படையாகக்கொண்டு செய்யப்பட்ட டிரை அசிடோன் டிரை பெராக்சைடு (TATP) வெடிகுண்டுகளைத்தான் பயங்கரவாதிகள் இப்போது பயன்படுத்திவருகின்றார்கள்.
"சார், என்னுடைய டூத்பேஸ்ட்டில்கூட பெராக்ஸைடு சேர்க்கப்பட்டிருக்கிறது. என்னையும் விமானத்திற்கு வெளியே நிறுத்தி வைத்துவிடுவார்களா?" என்றொரு குரல் கேட்கிறது.
இப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் "சில்"லு புத்திசாலித்தனமானதாம். வெடிகுண்டில் சேர்க்கப்பட்டுள்ள பெராக்ஸைடை மட்டும்தான் அடையாளம் காட்டுமாம்.
இன்னும் படிக்க:
http://www.sciencedaily.com/videos/2008/0704-sniffing_out_bombs.html
கல்வியா? செல்வமா?
அண்மையில் தினமணியில் வெளியான ஒரு கட்டுரையில் படித்தது இது.
நர்சரி பள்ளியில் படிக்கும் ஒரு தமிழ்க்குழந்தை சொன்னதாம்: “நான் பெரியவன் ஆனதும் என்னுடைய அப்பாவிற்கு ஒரு வீடு வாங்கித்தருவேன். ஏனென்றால் எங்களுடைய வீட்டை விற்றுத்தான் என்னை நர்சரி பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கிறார்.”
நகைச்சுவைக்காக இது சொல்லப்பட்டாலும் இன்றைய தமிழ்நாட்டின் கல்விச்சூழ்நிலை இதுதான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
கல்வியை ‘கல்விச்செல்வம்’ என்று சொல்லுகிறார்கள். ஆனால் அந்தக்கல்வியைப்பெறுவதற்கு பொருட்செல்வம் தேவை என்பதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை.
நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆரம்பத்தில் கடன்வாங்கி பிள்ளைகளை சேர்த்துவிடுவதும், காலப்போக்கில் கட்டணம் செலுத்தமுடியாமல் அரசுப்பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை மாற்றம் செய்வதும் நாம் அன்றாடம் காணக்கூடியதுதான்.
நடுத்தர மக்களின் ஆங்கில மோகத்தைப்பயன்படுத்தி இந்த நர்சரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அடிக்கும் பகல் கொள்ளையை கண்டுகொள்ள யாருமே இல்லை.
கட்டாய நன்கொடைக்கு எதிராக புகார்கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சொல்வது வாடிக்கையான சமாதானம்தான். தங்களுடைய பிள்ளைகள் படிக்கும் பள்ளிநிர்வாகத்தின்மீது புகார் கொடுக்க யார்தான் முன்வருவார்கள்?
இந்த அரசாங்கம் எதைஎதையோ இலவசமாகக்கொடுக்கிறது. இன்னும் கொடுக்கப்போவதாக சொல்லி வருகிறது.
தரமான கல்வியை இலவசமாக கொடுப்போம் என்று எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லையே, அது ஏன்?
நர்சரி பள்ளியில் படிக்கும் ஒரு தமிழ்க்குழந்தை சொன்னதாம்: “நான் பெரியவன் ஆனதும் என்னுடைய அப்பாவிற்கு ஒரு வீடு வாங்கித்தருவேன். ஏனென்றால் எங்களுடைய வீட்டை விற்றுத்தான் என்னை நர்சரி பள்ளிக்கூடத்தில் சேர்த்திருக்கிறார்.”
நகைச்சுவைக்காக இது சொல்லப்பட்டாலும் இன்றைய தமிழ்நாட்டின் கல்விச்சூழ்நிலை இதுதான் என்பதை யாராலும் மறுக்கமுடியாது.
கல்வியை ‘கல்விச்செல்வம்’ என்று சொல்லுகிறார்கள். ஆனால் அந்தக்கல்வியைப்பெறுவதற்கு பொருட்செல்வம் தேவை என்பதுதான் இன்றைய தமிழகத்தின் நிலை.
நர்சரி மற்றும் மெட்ரிகுலேஷன் பள்ளிகளில் ஆரம்பத்தில் கடன்வாங்கி பிள்ளைகளை சேர்த்துவிடுவதும், காலப்போக்கில் கட்டணம் செலுத்தமுடியாமல் அரசுப்பள்ளிக்கு தங்கள் குழந்தைகளை மாற்றம் செய்வதும் நாம் அன்றாடம் காணக்கூடியதுதான்.
நடுத்தர மக்களின் ஆங்கில மோகத்தைப்பயன்படுத்தி இந்த நர்சரி, மெட்ரிகுலேஷன் பள்ளிகள் அடிக்கும் பகல் கொள்ளையை கண்டுகொள்ள யாருமே இல்லை.
கட்டாய நன்கொடைக்கு எதிராக புகார்கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு சொல்வது வாடிக்கையான சமாதானம்தான். தங்களுடைய பிள்ளைகள் படிக்கும் பள்ளிநிர்வாகத்தின்மீது புகார் கொடுக்க யார்தான் முன்வருவார்கள்?
இந்த அரசாங்கம் எதைஎதையோ இலவசமாகக்கொடுக்கிறது. இன்னும் கொடுக்கப்போவதாக சொல்லி வருகிறது.
தரமான கல்வியை இலவசமாக கொடுப்போம் என்று எந்த ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் அறிக்கையில் சொல்லவில்லையே, அது ஏன்?
கல்வியுடன் கை குலுக்கும் கருப்புப்பணம்
தனியார் பள்ளிகளில் அதிகக் கட்டணம் வசூலிக்கப்படுவதை எதிர்த்து பாவேந்தன் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருக்கிறார். தமிழக அரசு தாக்கல்செய்த பதில் மனுவில் அதிக கட்டணம் வசூலிப்பதைக் கண்காணிக்க ஒரு குழு அமைத்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இது வழக்கமான பதில்தான். அரசின் இந்த பதிலைப்பற்றி பொதுமக்கள்தான் கருத்து தெரிவிக்கவேண்டும்.
‘பொதுமக்கள் புகார்கொடுத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்’ என்பது அரசின் வாதம். ‘அரசிடமிருந்து எந்த உதவியும் பெறாத கல்வி நிலையங்களின் அநியாய கட்டண வசூலை கட்டுப்படுத்த அதிகாரம் இல்லை’ என்று உச்சநீதி மன்றம் ஏற்கனவே தீர்ப்பளித்துள்ளது.
இந்தத் தீர்ப்பும் பொதுமக்களிடம் ஏராளமான கேள்விகளை விதைத்துள்ளது. தங்களுடைய பிள்ளைகளை நல்ல பள்ளிகளில் சேர்த்து படிக்கவைக்க ஆசைப்படும் ஏழை எளிய மக்களுக்கு நிவாரணம் அளிக்கக்கூடிய எந்த ஆக்கபூர்வ நடவடிக்கையும் இதுவரை இல்லை என்பதுதான் சோகம்.
ஆனால் இம்முறை பொதுமக்களிடமிருந்து புகார்கள் பெறப்பட்டுள்ளது ஒரு அதிசயமான நிகழ்வு. 14 ஆம் தேதி வெளியான செய்தியின்படி மாநிலம் முழுவதும் பள்ளிகளில் அதிகக்கட்டணம் வசூலிப்பதாக 87 புகார்கள் பெற்றோர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளது. இவற்றுள் 55 பள்ளிகள் அரசுப்பள்ளிகள் என்பது தமிழக அரசுக்கு பெருமை தருவதாக இல்லை.
பெற்றோர்கள் அளிக்கும் புகார்களும் அவற்றின்மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளும் பொதுமக்கள் எளிதில் அறியும் வண்ணம் வெளிப்படைத்தன்மையாக இருத்தல் வேண்டும். பள்ளிக்கல்விக்கென உள்ள இணையதளத்தில் புகார்களையும், அவற்றின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கையையும் வெளியிடுவதில் என்ன தவறு இருக்கிறது?
கல்வி நிலையங்களை நடத்துவோருக்கும், அரசியலில் பணம் பண்ணுவோருக்கும் கள்ளக்கூட்டணி இருப்பதாக மக்களிடம் சந்தேகம் இருக்கிறது.
சந்தேகத்தைப்போக்கவேண்டிய பொறுப்பு அரசுக்கு இருக்கிறது.
காதிருந்தும் செவிடராய்
செவித்திறன் குறைந்தவர்களுக்கு தமிழக அரசு சிறப்பு பள்ளிகளை நடத்தி வருகிறது.
1979 வரை தமிழக அரசின் கல்வித்துறையின் கட்டுப்பாட்டின்கீழ் இந்தப்பள்ளிகள் இயங்கி வந்தன.
இப்போது சமூக நலத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கிவருகின்றன.
இந்தப்பள்ளிகளின் தேர்ச்சி விகிதம் பல ஆண்டுகளாக மிகக்குறைந்த அளவிலேயே இருந்து வருகிறது.
.
சேலத்தில் இயங்கும் செவித்திறன் குறைந்தோருக்கான சிறப்புப்பள்ளியின் தேர்ச்சி விகிதம் கடந்த பத்து ஆண்டுகளாக பூஜ்யம்தான்.
மாணவர்கள் சரியாக படிக்கவில்லை என்று காரணம்கூறி அரசு தப்பிக்க முடியாது.
இந்தப்பள்ளியில் ஒன்பது பத்தாம் வகுப்புகளுக்கு கணிதப்பாடம் போதிக்கும் ஆசிரியர் 1998 முதல் நியமிக்கப்படவில்லை.
இப்போது இருப்பவர் வெறும் பொறுப்புத்தலைமை ஆசிரியர்தான்.
இவரது பொறுப்பான நினைவூட்டல்கள் செவித்திறன் குறைந்த சமூகநலத்துறையை எட்டாதது ஒன்றும் வியப்பான செய்தி இல்லை.
தமிழ்நாடு முழுவதும் இயங்கிவரும் 11 பள்ளிகளிலும் இதே நிலைதான்.
அனைத்துப்பள்ளிகளிலும் 35 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதாக ஆசிரியர் சங்க நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
ஈரோடு, ஊட்டி, தருமபுரி, விருதுநகர் இங்கெல்லாம் இயங்கும் பள்ளிகளில் கணித ஆசிரியர்களே இல்லை என்பதில் இருந்து அரசின் செவித்திறன் குறைந்துவருகிறது என்பது தெரிகிறது.
செவித்திறன் குறைந்தவர்களுக்காக மாநிலம் முழுவதும் 30 தனியார் பள்ளிகள் இயங்கிவருகின்றன.
இந்தப்பள்ளிகளில் ஏற்படும் ஆசிரியர் பணியிடங்களை நிரப்பிக்கொள்வதற்கான அனுமதி 1992 க்குப்பிறகு வழங்கப்படவில்லை.
சட்டமன்றத்தில் அடிக்கடி மேசையைத்தட்டும் ஒலி கேட்கிறது.
உறக்கத்தில் இருக்கும் தமிழக சமூக நலத்துறையை தட்டி எழுப்புவதற்காக அந்த மேசைகள் ஒருமுறையாவது தட்டப்படுமா என்பதே பாவப்பட்ட பொதுமக்களின் எதிர்பார்ப்பு.
புதுவாழ்வு பெறுமா சமச்சீர் கல்வி?
சமச்சீர்கல்வி மீண்டும் செய்தித்தாட்களில் இடம்பிடித்துள்ளது. இந்த முறை முதல்வர் சமச்சீர்கல்வியை உச்சரித்திருக்கிறார்.
2010-2011 ஆம் ஆண்டில் இருந்து சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சமச்சீர்கல்வி முறை கல்வியாளர்களின் தணியாத தாகம்.
அனைத்து கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து ஒரு பொது கல்வி வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் பொது பாடத்திட்டம், பொது பாடநூல்கள் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் செயல்கள் நடைபெறுமாம்.
பயிற்றுமொழியாக தமிழுடன் இப்போது நடைமுறையில் உள்ள பிறமொழிகளும் தொடருமாம்.
சமச்சீர் கல்வி முறை எதிர்கொள்ளவெண்டிய பாதை கரடுமுரடானது.
எனினும் முதல்வரின் கவனதைப்பெற்றிருப்பதால் இந்தப்பாதை சீரமைக்கப்படும் என்று நம்புவோம்.
2010-2011 ஆம் ஆண்டில் இருந்து சமச்சீர் கல்வி நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார்.
இந்த அறிவிப்பு வரவேற்கத்தக்கது.
தனியார் பள்ளிகளின் கட்டணக்கொள்ளைக்கு முற்றுப்புள்ளி வைக்கக்கூடிய சமச்சீர்கல்வி முறை கல்வியாளர்களின் தணியாத தாகம்.
அனைத்து கல்வி வாரியங்களையும் ஒருங்கிணைத்து ஒரு பொது கல்வி வாரியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வரும் கல்வி ஆண்டில் முதல் வகுப்பிலும், ஆறாம் வகுப்பிலும் பொது பாடத்திட்டம், பொது பாடநூல்கள் அடிப்படையில் கற்றல் கற்பித்தல் செயல்கள் நடைபெறுமாம்.
பயிற்றுமொழியாக தமிழுடன் இப்போது நடைமுறையில் உள்ள பிறமொழிகளும் தொடருமாம்.
சமச்சீர் கல்வி முறை எதிர்கொள்ளவெண்டிய பாதை கரடுமுரடானது.
எனினும் முதல்வரின் கவனதைப்பெற்றிருப்பதால் இந்தப்பாதை சீரமைக்கப்படும் என்று நம்புவோம்.
மணக்கிறது மக்களாட்சி
இப்போதெல்லாம் ஒரு சட்டசபைத் தேர்தலில் வெற்றிபெற ஒரு கோடி ரூபாய் தேவைப்படுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரு காலத்தில் தேர்தல் செலவை சந்திக்க வேட்பாளரும் அரசியல் கட்சிகளும் துண்டேந்தி வாக்காளரை படியேறி சந்தித்தனர்.
அப்போதெல்லாம் நிதிபெறுவதற்காக வாசற்படியேறிச்சென்ற வேட்பாளர்கள் இப்போது ‘நிதி’ கொடுப்பதற்காக படியேறிச்சென்று வாக்காளர்களை சந்திக்கிறார்கள்.
இப்போது யாரும் துண்டேந்தி நிதி திரட்டுவது இல்லை.
ஆனால் தேர்தல் நிதியளிப்பு கூட்டங்கள் நடத்துவதும் ‘சூட்கேஸ்’ கட்சித்தலைவரிடம் கொடுக்கப்படுவதும் நடைபெறுகிறது.
இந்த சூட்கேஸ்களில் பணம் எப்படி திரட்டப்படுகிறது?
அரசியல் கட்சிகள் தங்களுடைய தொண்டர்களைக்காட்டிலும் தொழிலதிபர்களையே தேர்தல் நிதிக்காக நம்பியிருக்கின்றனர்.
தொழிலதிபர்களும் ஆளும் கட்சி, எதிர்க்கட்சி இரண்டிற்குமே தேர்தல்நிதி கொடுக்கிறார்கள்.
ஆனால் தங்களுக்குள் ரகசியமாக பேசிவைத்துக்கொண்டு எந்தக்கட்சி வெற்றிபெற வேண்டும் என்று நினைக்கிறார்களோ அந்தக்கட்சிக்கு ஐம்பது சதவீதம் தொகையை கூடுதலாக கொடுக்கி
றார்கள்.
பணம் வாங்கிக்கொண்ட கட்சிகள் ஆட்சியில் அமர்ந்தால், தொழிலதிபர்கள் என்னென்ன சலுகைகள் வேண்டுமென்று கேட்கிறார்களோ அதையெல்லாம் அரசு செய்யவேண்டும்.
எதிர்க்கட்சியில் அமர்ந்தால் தொழிலுக்கு இடையூறு செய்யும் பிரச்சினையான கேள்விகளை சட்டமன்றத்தில் கேட்கக்கூடாது.
'விலைவாசியைக்குறைக்கிறேன்' என்று வியாபாரிகளுக்கு கடிவாளம் போடக்கூடாது.
'அன்னாடங்காச்சிகளுக்கு ஆதரவாக இருப்பேன்' என்று ஆன்லைன் வியாபாரத்திற்கு குறுக்கே நிற்கக்கூடாது.
இவையெல்லாம் ஜனநாயக ஒப்பந்தங்கள்.
மீறினால் நம்பிக்கையில்லா தீர்மானங்கள் வெடிக்கும்.
அரசின் நடவடிக்கைகளை கூடவே இருந்து கண்காணிக்க சட்டமன்றத்திலும், அமைச்சரவையிலும் தொழிலதிபர்களின் பிரதிநிதிகளுக்கு இடமளிக்கவேண்டும்.
எந்த அமைச்சரவையிலாவது, எல்லா அமைச்சர்களும் ‘கக்கன்’களாக இருந்து பார்த்திருக்கிறோமா?
இது என்ன கூத்து
தமிழகத்தில் உள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளுக்கு ஒரு விசித்திரமான சுற்றறிக்கை அனுப்பப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தமிழாசிரியர்கள் ஆங்கிலம் கலந்த தமிழில் வகுப்புகள் எடுப்பதாகவும், இதன் காரணமாக தமிழ் மொழியில் உள்ள தூய சொற்கள் மாணவர்களுக்கு அறிமுகமில்லாமல் போய்விடுவதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
அரசாங்கப்பள்ளிகளுக்கும், அரசாங்கத்தின் உதவிபெற்று நடத்தப்படும் பள்ளிகளுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மாணவர்களின் கண்ணையும் கருத்தையும் கட்டிப்போட்டிருக்கும் தொலைக்காட்சிப்பெட்டிகள் சதா சர்வ காலமும் ஆங்கிலம் கலந்த ‘டமிலில்’ தொழில் செய்துகொண்டிருக்கும்போது வகுப்பறையை மட்டும் செப்பனிட்டுப்பயனில்லை.
தமிழுணர்வையும், தமிழையும் தழைக்கச்செய்யவேண்டிய பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களே ‘டமில்’ நிகழ்ச்சிகளில் காசு பார்த்துக்கொண்டிருக்கும்போது, பாவம் இந்த தமிழாசிரியர்கள் என்ன செய்யமுடியும்?
தமிழாசிரியர்கள் ஆங்கிலம் கலந்த தமிழில் வகுப்புகள் எடுப்பதாகவும், இதன் காரணமாக தமிழ் மொழியில் உள்ள தூய சொற்கள் மாணவர்களுக்கு அறிமுகமில்லாமல் போய்விடுவதாகவும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது.
அரசாங்கப்பள்ளிகளுக்கும், அரசாங்கத்தின் உதவிபெற்று நடத்தப்படும் பள்ளிகளுக்கும் இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
மாணவர்களின் கண்ணையும் கருத்தையும் கட்டிப்போட்டிருக்கும் தொலைக்காட்சிப்பெட்டிகள் சதா சர்வ காலமும் ஆங்கிலம் கலந்த ‘டமிலில்’ தொழில் செய்துகொண்டிருக்கும்போது வகுப்பறையை மட்டும் செப்பனிட்டுப்பயனில்லை.
தமிழுணர்வையும், தமிழையும் தழைக்கச்செய்யவேண்டிய பொறுப்பான பதவிகளில் இருப்பவர்களே ‘டமில்’ நிகழ்ச்சிகளில் காசு பார்த்துக்கொண்டிருக்கும்போது, பாவம் இந்த தமிழாசிரியர்கள் என்ன செய்யமுடியும்?
அரசு மருத்துவமனையில் பரபரப்பு
அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட எய்ட்ஸ் நோயாளியை, மருத்துவமனை ஊழியர்கள் வெளியே வீசியது, செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவு நுழைவாயில் அருகில், சாலையோரம் நேற்று காலை 30 வயது மதிக்கத்தக்க பெண் அனாதையாக கிடந்தார். அழுக்கடைந்த துணிகளை போர்த்தியிருந்தார். அப்பெண் மெலிந்த தேகத்துடன் பரிதாபமாக காணப்பட்டார். காலை புறநோயாளிகள் பிரிவிற்கு வந்தவர்கள் அப்பெண்ணை பரிதாபமாக பார்த்தபடி சென்றனர். மருத்துவமனை எதிரிலிருந்த கடைக்காரர்கள் கூறும்போது, “நேற்றுமுன்தினம் மாலை 3 மணிக்கு மருத்துவமனை ஊழியர்கள், சம்பந்தப்பட்ட பெண்ணை, “ஸ்டிரெச்சரில்’ கொண்டு வந்து வீசிச் சென்றனர். அந்தப் பெண் இரவில் குளிரிலும், மழையிலும் கேட்பாரின்றி கிடந்தார். யாரும் அவரைக் கண்டு கொள்ளவில்லை. அவர் தெலுங்கில் ஏதோ கூறிக் கொண்டிருந்தார். சிலர் தெலுங்கில் பேசியபோது ஆந்திர மாநிலம், நவ்வாடா மாவட்டத்தைச் சேர்ந்த எரையன் மனைவி என தெரிவித்தார்’ என்றனர். இது குறித்து, நேற்று சிலர் மருத்துவமனை டீனுக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பின் பகல் 12 மணிக்கு டாக்டர்கள் ஊழியர்களுடன் வந்து, “ஸ்டிரெச்சரில்’ அந்தப் பெண்ணை தூக்கிச் சென்று, வார்டில் அனுமதித்தனர். பின் அந்தப் பெண்ணுக்கு குளுக்கோஸ் ஏற்றினர். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட பெண்ணை, ஊழியர்கள் வெளியே வீசிச்சென்றது குறித்து, டீன்(பொறுப்பு) ஜெகன்நாதனைக் கேட்டபோது அவர் கூறியதாவது: அந்த பெண் ஆந்திராவைச் சேர்ந்தவர். திருப்போரூரில் கணவனுடன் தங்கி வேலை செய்து வந்துள்ளார். 15 நாட்களுக்கு முன் அவரது கணவர் இங்கு வந்து சேர்த்தார். அப்போது அவர்கள் தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த ஆவணங்களைப் பார்த்தபோது, அந்தப்பெண் எச்.ஐ.வி.,யால் பாதிக்கப்பட்டவர் என்பது தெரியவந்தது. மருத்துவமனை ஊழியர்கள் பணம் வசூலித்து அவரது கணவனுக்கு 500 ரூபாயை கொடுத்தனர். பணத்தை வாங்கிய அவர், மூன்று நாட்களுக்கு முன், ஓடி விட்டார். யாரும் இல்லாத நிலையில், நேற்று முன்தினம் அந்த பெண்ணை ரத்தப் பரிசோதனைக்காக வார்டு பாய் ஸ்டிரெச்சரில் பரிசோதனைக் கூடத்திற்கு அழைத்துச் சென்றார். பின் மற்றொரு நோயாளியை அழைத்து வருவதற்குள் இப்படி நிகழ்ந்து விட்டது. இவ்வாறு டீன் கூறினார். நேற்றுமுன்தினம் மாலை 3 மணிக்கே ஸ்டிரெச்சரில் தூக்கிவந்து வெளியே போட்டுவிட்டு சென்றதாக அங்கிருந்தவர்கள் கூறியது குறித்து கேட்டதற்கு, “நேற்றுமுன்தினம் பணியிலிருந்த வார்டு பாய் இன்று விடுமுறை. நாளைக்கு வருவார். இது குறித்து விசாரிக்கிறேன். அவர் மீது தவறு இருந்தால் உரிய நடவடிக்கை எடுப்பேன்’ என்றார். சம்பந்தப்பட்ட பெண்ணை மருத்துவமனை ஆம்புலன்ஸ் மூலம் தாம்பரம் சானடோரியம் மருத்துவமனைக்கு அனுப்ப உள்ளதாக தெரிவித்தார். மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பெண்ணை, மனிதாபிமானமற்ற மருத்துவமனை ஊழியர்கள் வெளியே வீசிய சம்பவம், செங்கல்பட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது
கணவர் விவாகரத்து; காரணம் டி.வி.பார்க்க விடவில்லையாம்
இந்தியாவில் மும்பை- புனே நகரைச் சேர்ந்த ஒரு மனைவி, கடந்த நான்கு ஆண்டு காலமாக தொலைக் காட்சியில் இந்தி மொழித் தொடர்களைப் பார்க்கவிடாமல் தன்னைத் தடுத்து கணவர் தன்னை அலைக்கழிப்பதாகச் சொல்லி விவாகரத்து பெற்றார். அந்தத் தம்பதியின் ஆறு வயது பிள்ளையை மனைவியிடமே ஒப்படைக்கும்படியும் குடும்ப நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளதாக இந்தியாவின் டெய்லி நியூஸ் அனலைசஸ் என்ற செய்தித்தாள் தெரிவித்துள்ளது.
நன்றி டெய்லி நியூஸ் அனலைசஸ்
லஞ்ச புகார் தெரிவிக்க எஸ்.எம்.எஸ் நம்பர்கள்:
ரயில் வேயில் யாராவது லஞ்சம் கேட்டால் 155210, 9444788124, 9444788125, 9444788126, 9444788127 என்ற எண்களில் புகார் தெரிவிக்கலாம் என ரயில்வே விஜிலென்ஸ் பிரிவு அறிவித்துள்ளது.
( நன்றி தினகரன் 30-11-09 )
Sunday, November 29, 2009
பதின்மூன்று குணங்கள்
வெற்றி வாழ்க்கை வாழ்ந்த மனிதர் தான் பின்பற்ற வேண்டிய பண்புகளாகப் பதின்மூன்று குணங்களை தன் இளமையிலேயே குறித்துக் கொண்டு வாழ முயற்சித்ததாகக் கூறினார். அவை-
1) மிதத்தன்மை : உண்பதிலும், அருந்துவதிலும் மிதத்தன்மை முக்கியம். ஊக்கத்தைக் கெடுக்கும் அளவு உண்ணாதே. வெறி கொள்ளும் அளவு குடிக்காதே.
2) நாவடக்கம் : பிறருக்கோ, உனக்கோ நலம்புரியும் சொற்களை அன்றி வேறு சொற்க¨ளைப் பேசாதே. வெறும் நேரம் போக்கும் பேச்சில் எப்போதும் கலந்து கொள்ளாதே.
3) ஒழுங்குமுறை : உன் பொருள்கள் ஒவ்வொன்றையும் உரிய இடத்தில் வைக்கப் பழகு. உன் தொழிலின் ஒவ்வொரு பகுதிக்கும் உரிய ஒரு காலத்தை ஒதுக்கி வை.
4) உறுதியுடைமை : செய்ய வேண்டியவற்றைச் செய்ய உறுதி கொள். உறுதி கொண்டவற்றைத் தவறாது செய்.
5) சிக்கனம் : உனக்கோ, பிறருக்கோ நன்மை செய்வதற்காக அல்லாமல் வேறெதற்காகவும் பணத்தை செலவழிக்காதே. அதாவது, வீண் செலவு செய்யாதே.
6) முறையான உழைப்பு : காலத்தை சிறிதும் இழக்காதே. எப்போதும் பயனுள்ள எதையாவது செய்து கொண்டிரு. தேவையற்ற செயல்கள் யாவையும் ஒழித்து விடு.
7) வாய்மை : பிறரைப் புண்படுத்தும் சூழ்ச்சி செய்யாதே. இரண்டகமில்லாமலும், நேர்மையுடனும் சிந்தனை செய். பேசும் போதும் அப்படியே பேசு.
8) நேர்மை : தீங்கு செய்து அதன்மூலம் யாருக்கும் தீமை உண்டாக்காதே. அது போல கடமைகளை செய்யாமல் விட்டும் அடுத்தவருக்கு தீங்கு செய்யாதே.
9) நடுநிலையுணர்வு : எதிலும் அதீதத் தன்மையை விலக்கு. உனக்கு இழைத்த தீங்குகளுக்காகக் கூட நீ அடுத்தவரிடம் சினம் கொள்ளாதிரு.
10) துப்புரவு : உடல், உடை, இருக்குமிடம் ஆகியவற்றில் எத்தகைய துப்புரவுக் கேட்டுக்கும் இடம் அளிக்காதே.
11) மன அமைதி : சின்னச் சின்ன விஷயங்களுக்காகவோ, தவிர்க்க முடியாத மற்றும் தற்செயலாய் நிகழும் நிகழ்ச்சிகளுக்காகவோ மன அமைதி இழக்காதே.
12) ஒழுக்கமுடைமை : அயர்வு அல்லது பலவீனம் அடையும் அளவுக்கோ, உன்னுடைய மற்றும் அடுத்தவருடடைய அமைதிக்கோ, புகழுக்கோ கேடு உண்டாக்கும் அளவுக்கோ இன்பம் நுகராதே.
13) பணிவுடைமை : இயேசுநாதரையும், சாக்ரடீசையும் பின்பற்று.
பெஞ்சமின் ·ப்ராங்க்ளின் இந்த பண்புகளைத் தன் வாழ்க்கையில் இளமையில் இருந்தே பின்பற்றத் துவங்கியது தான் தன் வெற்றிகளுக்கும் மன அமைதிக்கும் காரணம் என்று கருதினார். எல்லா நேரங்களிலும் இதைப் பின்பற்றியதில் வெற்றி பெற முடிந்ததில்லை என்பதை ஒத்துக் கொள்ளும் அந்தப் பேரறிஞர் ஆனாலும் திரும்பத் திரும்ப இவற்றைத் தன் வாழ்க்கையில் பின்பற்ற முயன்றதாகவும் சிறிது சிறிதாக பின்பற்றுவதில் வெற்றி பெற முடிந்ததாகவும் கூறுகிறார்.
அவர் வாழ்வில் எளிய வாழ்க்கையே இந்தப் பண்புகளுக்கு அஸ்திவாரமாக இருந்தது என்றும் சொல்லலாம். தன் சுய சரிதத்தில் ஓரிடத்தில் கூறுகிறார். "நான் எளிய வாழ்க்கையையே முக்கியமாக எடுத்துக் கொண்டேன். ஏனென்றால் நல்லறிவையும் மூளைத் தெளிவையும் தரத் தக்க பண்பு அதுவே. வாழ்க்கையில் இடைவிடாது குறுக்கிடும் மாயக்கவர்ச்சிகளை எதிர்த்து நிற்கவும், பழைய பழக்கங்களின் ஓய்வொழிவில்லாத ஈர்ப்பாற்றலைத் தடுத்து சமாளிக்கவும் தளராத விழிப்புணர்வு தேவை. மூளைத் தெளிவும் அமைதியும் இல்லா விட்டால் இந்தத் தளரா விழிப்புணர்வு ஏற்படாது"
பல துறைகளில் வெற்றி பெறுவதில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட மனநிலையிலும் ஒரு நிறைவை அவர் காண இந்த 13 பண்புகளும் அவருக்கு உதவியிருக்கின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமிருக்க முடியாது. ஏனென்றால் இந்தப் பதின்மூன்றில் எந்த நல்ல பண்பும் விட்டுப் போகவில்லை. ஒரு மாபெரும் வெற்றியாளர் பின்பற்றி வெற்றி பெற்ற பண்புகளை நாமும் ஏன் பின்பற்றி வெற்றி பெறக் கூடாது?
1) மிதத்தன்மை : உண்பதிலும், அருந்துவதிலும் மிதத்தன்மை முக்கியம். ஊக்கத்தைக் கெடுக்கும் அளவு உண்ணாதே. வெறி கொள்ளும் அளவு குடிக்காதே.
2) நாவடக்கம் : பிறருக்கோ, உனக்கோ நலம்புரியும் சொற்களை அன்றி வேறு சொற்க¨ளைப் பேசாதே. வெறும் நேரம் போக்கும் பேச்சில் எப்போதும் கலந்து கொள்ளாதே.
3) ஒழுங்குமுறை : உன் பொருள்கள் ஒவ்வொன்றையும் உரிய இடத்தில் வைக்கப் பழகு. உன் தொழிலின் ஒவ்வொரு பகுதிக்கும் உரிய ஒரு காலத்தை ஒதுக்கி வை.
4) உறுதியுடைமை : செய்ய வேண்டியவற்றைச் செய்ய உறுதி கொள். உறுதி கொண்டவற்றைத் தவறாது செய்.
5) சிக்கனம் : உனக்கோ, பிறருக்கோ நன்மை செய்வதற்காக அல்லாமல் வேறெதற்காகவும் பணத்தை செலவழிக்காதே. அதாவது, வீண் செலவு செய்யாதே.
6) முறையான உழைப்பு : காலத்தை சிறிதும் இழக்காதே. எப்போதும் பயனுள்ள எதையாவது செய்து கொண்டிரு. தேவையற்ற செயல்கள் யாவையும் ஒழித்து விடு.
7) வாய்மை : பிறரைப் புண்படுத்தும் சூழ்ச்சி செய்யாதே. இரண்டகமில்லாமலும், நேர்மையுடனும் சிந்தனை செய். பேசும் போதும் அப்படியே பேசு.
8) நேர்மை : தீங்கு செய்து அதன்மூலம் யாருக்கும் தீமை உண்டாக்காதே. அது போல கடமைகளை செய்யாமல் விட்டும் அடுத்தவருக்கு தீங்கு செய்யாதே.
9) நடுநிலையுணர்வு : எதிலும் அதீதத் தன்மையை விலக்கு. உனக்கு இழைத்த தீங்குகளுக்காகக் கூட நீ அடுத்தவரிடம் சினம் கொள்ளாதிரு.
10) துப்புரவு : உடல், உடை, இருக்குமிடம் ஆகியவற்றில் எத்தகைய துப்புரவுக் கேட்டுக்கும் இடம் அளிக்காதே.
11) மன அமைதி : சின்னச் சின்ன விஷயங்களுக்காகவோ, தவிர்க்க முடியாத மற்றும் தற்செயலாய் நிகழும் நிகழ்ச்சிகளுக்காகவோ மன அமைதி இழக்காதே.
12) ஒழுக்கமுடைமை : அயர்வு அல்லது பலவீனம் அடையும் அளவுக்கோ, உன்னுடைய மற்றும் அடுத்தவருடடைய அமைதிக்கோ, புகழுக்கோ கேடு உண்டாக்கும் அளவுக்கோ இன்பம் நுகராதே.
13) பணிவுடைமை : இயேசுநாதரையும், சாக்ரடீசையும் பின்பற்று.
பெஞ்சமின் ·ப்ராங்க்ளின் இந்த பண்புகளைத் தன் வாழ்க்கையில் இளமையில் இருந்தே பின்பற்றத் துவங்கியது தான் தன் வெற்றிகளுக்கும் மன அமைதிக்கும் காரணம் என்று கருதினார். எல்லா நேரங்களிலும் இதைப் பின்பற்றியதில் வெற்றி பெற முடிந்ததில்லை என்பதை ஒத்துக் கொள்ளும் அந்தப் பேரறிஞர் ஆனாலும் திரும்பத் திரும்ப இவற்றைத் தன் வாழ்க்கையில் பின்பற்ற முயன்றதாகவும் சிறிது சிறிதாக பின்பற்றுவதில் வெற்றி பெற முடிந்ததாகவும் கூறுகிறார்.
அவர் வாழ்வில் எளிய வாழ்க்கையே இந்தப் பண்புகளுக்கு அஸ்திவாரமாக இருந்தது என்றும் சொல்லலாம். தன் சுய சரிதத்தில் ஓரிடத்தில் கூறுகிறார். "நான் எளிய வாழ்க்கையையே முக்கியமாக எடுத்துக் கொண்டேன். ஏனென்றால் நல்லறிவையும் மூளைத் தெளிவையும் தரத் தக்க பண்பு அதுவே. வாழ்க்கையில் இடைவிடாது குறுக்கிடும் மாயக்கவர்ச்சிகளை எதிர்த்து நிற்கவும், பழைய பழக்கங்களின் ஓய்வொழிவில்லாத ஈர்ப்பாற்றலைத் தடுத்து சமாளிக்கவும் தளராத விழிப்புணர்வு தேவை. மூளைத் தெளிவும் அமைதியும் இல்லா விட்டால் இந்தத் தளரா விழிப்புணர்வு ஏற்படாது"
பல துறைகளில் வெற்றி பெறுவதில் மட்டுமல்லாமல் தனிப்பட்ட மனநிலையிலும் ஒரு நிறைவை அவர் காண இந்த 13 பண்புகளும் அவருக்கு உதவியிருக்கின்றன என்பதில் எள்ளளவும் சந்தேகமிருக்க முடியாது. ஏனென்றால் இந்தப் பதின்மூன்றில் எந்த நல்ல பண்பும் விட்டுப் போகவில்லை. ஒரு மாபெரும் வெற்றியாளர் பின்பற்றி வெற்றி பெற்ற பண்புகளை நாமும் ஏன் பின்பற்றி வெற்றி பெறக் கூடாது?
பன்றிகள், சாக்கடை சூழ ஒரு குடியரசுத் தலைவர் வீடு!
நல்லவர்களை, நேர்மையாளர்ளை மதிக்கும் பண்பு எப்போது வரும் இந்த மக்களுக்கு!
சமீபத்தில் ஒரு இணைய தளத்தில் நான் படித்த செய்திக்கட்டுரை இது. சூடான விவாதத்துக்கு ஒத்துவருமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஆனால் தேசத்தின் தலைமகனாக இருந்த ஒருவர் எந்த அளவு, தன் சொந்த நலனை, சுற்றத்தார் நலனை பெரிதாக நினைக்காமல் இருந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
அவர் பெயர் நமக்கு நன்கு பரிச்சயமானதுதான்… டாக்டர் ஆ ப ஜெ அப்துல் கலாம்.
இந்திய அணு விஞ்ஞானத்தின் தந்தை. பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். குடியரசுத் தலைவராக மட்டுமல்ல… பல பெருமைகளைத் தேடித் தந்ததில் தேசத்தின் தலைமகன் அவர்.
ஆனால் அவர் பிறந்த ஊரும், வசித்த தெருவும் சாக்கடை தேங்கி, பன்றிகள், கழுதைகள் உலவும் இடமாக மாறிப் போய் கிடக்கிறது.
அந்தக் கட்டுரையில் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது:
“அவரது வீட்டையும், அந்த மாபெரும் மனிதர் வாழ்ந்த தெருக்களையும் பார்த்தால்தான் நமது பெருமை நமக்கு புரிவது எப்போது என்ற பெரும் ஏக்கம் வந்து தொலைக்கிறது. சாலையெங்கும் தேங்கி நிற்கும் மழை நீர்.
அங்கங்கே மேய்ந்து கொண்டிருக்கும் கழுதைகளையும், பன்றிகளையும் கடந்துதான் டூரிஸ்ட்டுகள் அந்த வீட்டின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள் (அந்த நீல வண்ண வீடுதான் கலாமுடையது. தற்போது அங்கே வசிப்பது அவரது அண்ணன். வீட்டின் பக்க சுவருக்கு கூட சிமெண்ட் பூசவில்லை பாருங்கள்).
பக்கத்திலேயே குடை ரிப்பேர் செய்து கொண்டிருக்கும் பெரியவர், தனது எட்டுக்கு எட்டு அளவு கொண்ட கடையில் தானும் கலாமும் இருப்பது போன்ற புகைப்படத்தை மாட்டியிருக்கிறார். விசாரித்தால் இவர்தான் கலாமை தூக்கி வளர்த்த அவரது தாய் மாமா என்றார்கள். தனது பத்தாவது தலைமுறை பேரனுக்கும் கோடிகளை சேர்த்து வைக்கிற அரசியல் தலைவர்கள் மத்தியில் தன்னை தூக்கி வளர்த்த தாய் மாமனுக்கு ஒன்றுமே செய்யவில்லை கலாம். அந்த போட்டோ கூட அவரே பணம் கொடுத்து பிரேம் போட்டதுதானாம்… (நன்றி: அந்தணன், தமிழ்சினிமா)”
-இதை தட்டச்சும்போதே விழிகளை நீர் மறைக்கிறது. கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜர் மனதில் வந்து போகிறார்.
அதிகாரிகளைக் கூப்பிட்டு, அந்தப் பகுதியை கொஞ்சம் மேம்படுத்தச் சொல்லியிருக்கலாம் அவர். ஆனால் அரசு எந்திரம் எதையும் முறையாகச் செய்யட்டும் என்ற நேர்மையான பார்வை. எல்லா மக்களுக்கும் என்ன விதிக்கப்பட்டுள்ளதோ, அதுவே எனக்கும் இருக்கட்டுமே என்ற தார்மீகம் அவரது மௌனத்தில் புதைந்திருப்பதாக நான் புரிந்து கொண்டேன்.
தனது ராமேஸ்வரம் பயணத்தின் போது, குறிப்பிட்ட எருமையின் பாலைக் கறந்து கொடுத்தால்தான் குடிப்பேன் என அடம்பிடித்து, ராஷ்ட்ரபதி பவன் எருமைகளை தனி ரெயில் பெட்டியில் கூட்டிச் சென்று சாதனை படைத்த ஜனாதிபதிகள் குடியிருந்த அதே குடியரசுத் தலைவர் மாளிகையில் இப்படி ஒரு எளிய தமிழனும் வாழ்ந்ததை எண்ணி பிடறி சிலிர்க்கிறது.
அதே நேரம் இந்த எளிமையும் நேர்மையும் கூட, இந்த நாட்டை, அதன் கேடுகெட்ட நிர்வாகத்தை, ஊழல் பேர்வழிகளை ஒரு இஞ்ச் அளவுக்குக் கூடத் திருத்த முடியவில்லையே என்ற ஆதங்கமும் நெஞ்சுக்குள் நெருப்புப் பந்தாய் பொங்குகிறது!
திருந்தவே திருந்தாதா இந்த தேசம்? நல்லர்வர்களை, நேர்மையாளர்களை மதிக்கும் அறிவு என்றைக்கு இந்த தேசத்து மக்களுக்கு வரப்போகிறது? உயிரோடு இருக்கும்போதே, ஒரு நல்ல மனிதரை மதிக்கும் பண்பை எப்போதுதான் நாம் கற்கப்போகிறோம்?
சமீபத்தில் ஒரு இணைய தளத்தில் நான் படித்த செய்திக்கட்டுரை இது. சூடான விவாதத்துக்கு ஒத்துவருமா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஆனால் தேசத்தின் தலைமகனாக இருந்த ஒருவர் எந்த அளவு, தன் சொந்த நலனை, சுற்றத்தார் நலனை பெரிதாக நினைக்காமல் இருந்திருக்கிறார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
அவர் பெயர் நமக்கு நன்கு பரிச்சயமானதுதான்… டாக்டர் ஆ ப ஜெ அப்துல் கலாம்.
இந்திய அணு விஞ்ஞானத்தின் தந்தை. பல சாதனைகளுக்குச் சொந்தக்காரர். குடியரசுத் தலைவராக மட்டுமல்ல… பல பெருமைகளைத் தேடித் தந்ததில் தேசத்தின் தலைமகன் அவர்.
ஆனால் அவர் பிறந்த ஊரும், வசித்த தெருவும் சாக்கடை தேங்கி, பன்றிகள், கழுதைகள் உலவும் இடமாக மாறிப் போய் கிடக்கிறது.
அந்தக் கட்டுரையில் இப்படிக் குறிப்பிடப்பட்டுள்ளது:
“அவரது வீட்டையும், அந்த மாபெரும் மனிதர் வாழ்ந்த தெருக்களையும் பார்த்தால்தான் நமது பெருமை நமக்கு புரிவது எப்போது என்ற பெரும் ஏக்கம் வந்து தொலைக்கிறது. சாலையெங்கும் தேங்கி நிற்கும் மழை நீர்.
அங்கங்கே மேய்ந்து கொண்டிருக்கும் கழுதைகளையும், பன்றிகளையும் கடந்துதான் டூரிஸ்ட்டுகள் அந்த வீட்டின் முன் நின்று புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள் (அந்த நீல வண்ண வீடுதான் கலாமுடையது. தற்போது அங்கே வசிப்பது அவரது அண்ணன். வீட்டின் பக்க சுவருக்கு கூட சிமெண்ட் பூசவில்லை பாருங்கள்).
பக்கத்திலேயே குடை ரிப்பேர் செய்து கொண்டிருக்கும் பெரியவர், தனது எட்டுக்கு எட்டு அளவு கொண்ட கடையில் தானும் கலாமும் இருப்பது போன்ற புகைப்படத்தை மாட்டியிருக்கிறார். விசாரித்தால் இவர்தான் கலாமை தூக்கி வளர்த்த அவரது தாய் மாமா என்றார்கள். தனது பத்தாவது தலைமுறை பேரனுக்கும் கோடிகளை சேர்த்து வைக்கிற அரசியல் தலைவர்கள் மத்தியில் தன்னை தூக்கி வளர்த்த தாய் மாமனுக்கு ஒன்றுமே செய்யவில்லை கலாம். அந்த போட்டோ கூட அவரே பணம் கொடுத்து பிரேம் போட்டதுதானாம்… (நன்றி: அந்தணன், தமிழ்சினிமா)”
-இதை தட்டச்சும்போதே விழிகளை நீர் மறைக்கிறது. கர்மவீரர், பெருந்தலைவர் காமராஜர் மனதில் வந்து போகிறார்.
அதிகாரிகளைக் கூப்பிட்டு, அந்தப் பகுதியை கொஞ்சம் மேம்படுத்தச் சொல்லியிருக்கலாம் அவர். ஆனால் அரசு எந்திரம் எதையும் முறையாகச் செய்யட்டும் என்ற நேர்மையான பார்வை. எல்லா மக்களுக்கும் என்ன விதிக்கப்பட்டுள்ளதோ, அதுவே எனக்கும் இருக்கட்டுமே என்ற தார்மீகம் அவரது மௌனத்தில் புதைந்திருப்பதாக நான் புரிந்து கொண்டேன்.
தனது ராமேஸ்வரம் பயணத்தின் போது, குறிப்பிட்ட எருமையின் பாலைக் கறந்து கொடுத்தால்தான் குடிப்பேன் என அடம்பிடித்து, ராஷ்ட்ரபதி பவன் எருமைகளை தனி ரெயில் பெட்டியில் கூட்டிச் சென்று சாதனை படைத்த ஜனாதிபதிகள் குடியிருந்த அதே குடியரசுத் தலைவர் மாளிகையில் இப்படி ஒரு எளிய தமிழனும் வாழ்ந்ததை எண்ணி பிடறி சிலிர்க்கிறது.
அதே நேரம் இந்த எளிமையும் நேர்மையும் கூட, இந்த நாட்டை, அதன் கேடுகெட்ட நிர்வாகத்தை, ஊழல் பேர்வழிகளை ஒரு இஞ்ச் அளவுக்குக் கூடத் திருத்த முடியவில்லையே என்ற ஆதங்கமும் நெஞ்சுக்குள் நெருப்புப் பந்தாய் பொங்குகிறது!
திருந்தவே திருந்தாதா இந்த தேசம்? நல்லர்வர்களை, நேர்மையாளர்களை மதிக்கும் அறிவு என்றைக்கு இந்த தேசத்து மக்களுக்கு வரப்போகிறது? உயிரோடு இருக்கும்போதே, ஒரு நல்ல மனிதரை மதிக்கும் பண்பை எப்போதுதான் நாம் கற்கப்போகிறோம்?
Subscribe to:
Posts (Atom)











